பக்கங்கள்

புதன், 29 டிசம்பர், 2010

இணையத்தில் ஒரு தேடல் .( பகுதி 1 )



என்னடா இது நமக்கு தெரியாததையா இவன் சொல்ல போறான் . அதன் கூகுள் ஆண்டவர் இருக்காரே அவருக்கு துணையா நம்ம விக்கி பீடிய  இருக்கே அத கேட்டா  சொல்லிட போகுது இதுல என்ன தெரிஞ்சுக்க இருக்கு . ?.. அப்படின்னு நினைக்காதிங்க .

இந்த பதிவை எழுதறதுக்கு முதல் காரணம் ஈரோடு சங்கமம் 2010 பதிவர்கள் வாசகர்கள் சந்திப்புதான் .இந்த சங்கமத்தை பற்றி நிறைய படிச்சு அத விட நிறைய ஏக்கத்தோட இருப்பிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் . இந்த ஏக்கத்தை போக்க வாட்டத்தை வாட்ட அடுத்த சங்கமத்துள கலந்துக்கறத தவிர வேற அரு மருந்து கிடையாதுங்க . சரி விசியத்துக்கு வரேன் . திருப்பூர் பதிவுலக நண்பர்களின் சேர்தளம் அமைப்பினர் ஏற்ப்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பயனுள்ள கலந்துரையாடலாக இருந்தது வந்திருந்த அனைவர்க்கும் .பதிவர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலில் அழகாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள் . சேர்தளம் அமைபினரும் செறிவு நிறைந்த கேள்விகளை விவாத பொருளாகவைத்திருந்தார்கள் .

அந்த கேள்விகளில் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்று . இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் முழுமையானதாக இருப்பதில்லை என்பது . ஒரு நூலகத்தில் கிடைக்கும் முழுமை இணையத்தில் கிடைப்பதில்லை என்று எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களையும் துணைக்கு அழைத்தே கேட்டார்கள் .வந்திருந்த பதிவர்கள் அனைவருமே ஆம் முழுமையாக இருப்பது இல்லை என்றே கூறினார் . எனக்கு இதில் உடன்பாடு இல்லை . காரணம் இந்த இணையத்தில் பல்வேறு வகைகளில் இனங்களில் தகவல்கள் முழுமையாக கொட்டி கிடக்கிறது அதனை நாம் எப்படி தேடி எடுப்பது என்பதில் தான் விசியமே இருக்கிறது .

முதலில் இன்றைய இணையம் எப்படி இயங்குகிறது என்பதை கூறி விடுகிறேன் . இப்போதைய இணையம் WEB 2.0 எனும் செயல்பாட்டில் உள்ளது . இந்த வெப் 2 என்பது இணைய பயனாளர்கள் தாங்களே தவகல்களை கொடுக்கவும் பெறவும் அந்த தகவல்களை பார்ப்பதற்கும் நேரிபடுத்தவும் உதவும் முறை . இந்த முறையில் தான் இப்போது நாம் உபயோகிக்கும் அனைத்து வகையான தேடுபொறிகளும் ( இதுல என்ன வகை இருக்குனு அப்பறம் சொல்லித்தரேன் இல்லன இப்போதைக்கு இந்த என்னோட இன்னொரு வலைப்பூ சுட்டி இது இங்க பாருங்க )  ,பேஸ் புக் , ஆர்குட் போன்ற தளங்களும் யு டியுப்,பிகசா , பிளிக்கர் போன்ற வீடியோ,புகைப்பட தளங்களும் வலைப்பூ சேவையை அளிக்கும் வோர்ட் பிரஸ் ,ப்ளாக் ஸ்பாட் ஆகிய தளங்களும் கட்டமைக்க பட்டு இயங்குகிறன .

இப்படி இயங்கும் தளங்கள் மூன்று முக்கிய விசியங்களை அடிப்படையாக கொண்டு உள்ளன.

1) Rich Internet Application - ( RIA ) :- இந்த அமைப்பபில் நடப்பது நமது இயங்கு தளத்தில் இருந்தது உலவியை பயன்படுத்தும் விதத்தையும் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ன தேவை என்பதை நாம் உள்ளீடு செய்யும் தகவல்களில் இருந்தது பெற்று அதற்க்கு ஏற்றவாறு செய்கிறது
                                           உதாரணம் :-  GMail மினஞ்சலில் நமக்கு வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் தகவல்களை ஒத்து வலப்பக்கத்தில் avarkal அளிக்கும் வரி விளம்பரங்கள் . சென்னையில் நீங்கள் இருந்தால் சென்னை தமிழ் நாடு இந்தியா சம்பந்தம் உடைய உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் தகவலுக்கு ஏற்ப அங்கே விளம்பரங்கள் காண்பிக்கப்படும் . அதுவே நீங்கள் அமெரிகாவில் இருந்தால் அங்கே உள்ள தகவல்களை அளிக்கும் .

2) Service-oriented Architecture (SOA) :-  இந்த அமைப்பு WEB 2 வின் மையமானது ஆகும் . இந்த அமைப்பு மற்ற பக்கங்கள் மாறும் தளங்களின் உள்ள தகவல்களை உடனுக்கு உடன் பயன்படுத்தும் அமைப்பு .
                                         உதாரணம் :- Feeds, RSS, Web Services, Mash-ups போன்ற நிரலிகள் .இந்த அமைப்பை வைத்து தான் நமது திரட்டிகள் நமக்கு தகவல்களை அளிக்கிறது.

3) Social Web :- இவைபற்றி நமக்கு எல்லாம் நன்கு தெரியும் ஒரு உபயோகிப்பாளரும் இன்னொரு உபயோகிப்பாளரும் தொடர்பு கொள்வது .
                                       உதாரணம் :- ஆர்குட் பேஸ் புக் போன்ற தளங்கள் .

சரி இவற்றில் இருந்தது எப்படி நமக்கு தகவல்கள் முழுமையாகவோ அரைகுறையாகவோ பெற முடிகிறது . என்பதை பார்ப்பதற்கு முன்னால் . தமது தேடு பொறிகள் எப்படி தகவல்களை தேடி எடுக்கிறது என்பதை மிக சுருக்கமாக கூறி விடுகிறேன் .

அனைத்து விதமான தேடு பொறிகளும் மேற்சொன்ன வெப் 2 எனும் இயங்கு முறையில் இயங்குகிறது .இந்த தேடு பொறிகள் தவல்களை மூன்று வகைகளில் நெறிபடுத்துகிறது அவை .
  1. Web crawling
  2. Indexing
  3. Searching
Web crawling :- இது என்ன பண்ணுமுன இணையத்துல இருக்கற எல்லா தளங்களையும் தேடி அதனோட பக்கங்களை தன்னகத்தே ஒரு நகலை வைத்து கொள்ளும் . இது அணு தினமும் ஓயாமல் நடக்கும் . நாம மூச்சு விடற மாறி தேடு பொறிகளுக்கு இந்த அமைப்பு .

Indexing :- இது எப்படினா உலகம் பூராவும் இருக்கற தளங்களின் பக்கங்களுக்கு எங்களை வழங்கும் . அதும் எப்படின்னு பாத்திங்கன்ன ஒரு ஒரு தளமும் எத்தனை தளங்களோட இணைக்க பட்டு இருக்கிறது அதன் பயன்பாடு என்ன அப்படின்னு பாத்து வரிசை படுத்தும் .

Searching :- இது என்ன பண்ணுது அந்த குறிபிட்ட தேடு பொறியில் இருக்கற பக்கங்களை தரவரிசை படி போய் பாத்து நாம கொடுக்கற குறிசொல் அடிப்படையில் தேடி எடுத்து தறும் . உதரணமா  கம்ப்யூட்டர்  கணபதி அப்படின்னு தேடும் போது எனது வலைதளத்தின் முகவரியை அளிக்கும் .

சரிங்க இன்னும் நிறைய சொல்லணும் இதை ஒரு முதல் பாகம வச்சுக்கங்க அடுத்த பதிவுல இன்னும் நிறைய புரியவைக்க முயற்சி செய்கிறேன் . அதுக்கு முன்னாடி நீங்க பண்ணவேண்டியது எல்லாம் மறக்காமஓட்டு போடுங்க .உங்க கருத்துகளையும் கேள்விகளையும் பின்னுட்டத்துல சொல்லிட்டு போங்க .


திங்கள், 27 டிசம்பர், 2010

நிகழ்வும் நினைப்பும் ஈரோடு சங்கமம் 2010



நாங்க எல்லாம் சேர்ந்து அசத்திட்டோம் அப்படின்னு நாங்களே சொல்லகூடாது ..... அது தற்பெருமை ஆனால் வந்திருந்த பதிவர்களின் மணம் கோணாமல் சிறப்பாக நடத்தி காட்டிய பெருமை எல்லாம் ஈரோடு கதிர் , ஆருரான் , சந்துரு அண்ணன் , ஜாபர் , கார்த்தி , பாலாசி , ( இவங்க கிட்டதான் நான் பேசினேன் அதனால இவங்க பேரு நல்ல நியாபகம் இருக்கு ) எல்லாருக்கும் போய் சேரும் . ஏதோ நெல்லுக்கு பாஞ்சது இந்த புல்லுக்கும் பாஞ்சு அந்த புண்ணியத்தை நானும் கொஞ்சம் கட்டிட்டு வந்துட்டேன்னு நினைக்கறப்ப நேத்து அடிச்ச சரக்கையும் மீறி செம மப்பு எனக்கு . ( நான் எப்படி சரக்கடிசேன் அப்படின்னு பின்னாடி விலாவாரியா யாரவது எழுதுவாங்க அப்ப தெரிஞ்சுக்கங்க இப்பவேண்டாம் ).

நைட் அடிச்ச மப்பு தெளியாததுக்கு ஒரு சின்ன உதாரணம் நான் இன்னும் ஈரோட்டுக்கு போகவே இல்லை .காரணம் என்னோட தலைகவசம் கதிர் அண்ணன் அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தது தான் ( சட்டத்தை ரொம்பவே நல்ல பின்பற்றுகிறேன் அப்படின்னு நினைச்சா உங்க நினைப்புல மன்ன அள்ளி நீங்களே போட்டுக்கங்க . திண்டல் கிட்ட போலிஸ் அய்யா ...!!! ( ஐயோ அய்யான்னு தானுங்க அவங்களை சொல்லோனும் ) ஒருத்தரு உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி ன்னு அவரு என்னை மடகிட்டறு தீவிரவாதி என்னமாரி அழக இருப்பனு சொல்லி .அப்ப பாத்தா வண்டிய சர்வீசி பண்ணின என் ஆருயிர் ஒன்றில் எதாவது ஒரு உயிரை எடுக்க நினைத்த நண்பன் விஜி தேவையான காகிதங்களை திரும்ப வைக்க மறந்து விட்டான் . நாம யாரு என்ன இருக்கு என்ன இல்லைன்னு எல்லாம் பாக்க மாட்டோம் இல்ல .. சரியான குசும்பனுங்க எக்குத்தப்பா பேசி மாட்டிகிட்டேன் . ( see Mr.Govindasamy எந்த மோட்டார் வாகன சட்டம் சொல்லி இருக்கு தேவையான ஆவணம் இல்லேன்னா வண்டிய சைக்கில் ஸ்டான்ட் ல விட்டு போகணும்னு எல்லாம் ரப்பு பேசி அந்த வழிய போக வர தலைகவசத கட்டாயம் உபயோகபடுத்தவேண்டியாத போச்சு :( சரி இத விடுங்க .... படிச்சு முடிச்சதுக்கு அப்பறம் சொல்லறேன்னு சொல்லறீங்கள ?.. நான் இத படிக்க சொல்லலைங்க இதுக்கு கீழ இருக்கறதா படிக்க சொல்லறேன் . )

எல்லாரையும் சரியான நேரத்துக்கு வரசொல்லி சரியாய் நடத்தினாங்க எல்லாரும் வழக்கம் போல நான் அதிகாலை 9 மணிக்கு எழுந்து விழா அரங்கிற்கு போய் சேர மணி 10.40 நல்லவேளை அந்த சமையத்துல குறைந்த அளவு நண்பர்கள் ( இனியும் அவங்களை பதிவர்கள்னு சொல்ல முடியாதுங்க ) தான் வந்து இருந்தாங்க . அடடே பரவலடா கணபதி கொஞ்சம் சொன்ன நேரத்துக்கு தான் வந்துட்டேன்னு எனக்கு நானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன் .

போன உடனே மிகப்பெரிய ஆச்சரியம் எங்க சந்துரு அண்ணன பாத்தது உங்க எல்லாருக்கும் தாமோதர் சந்துரு அப்படின நல்லாவே தெரியும் . எப்படியோ காலத்தால் காணமல் போயிருந்த என்னை மீண்டும் அவருடன் சங்கமித்ததில் இந்த சங்கமம் 2010 புண்ணியம் தேடிகொண்டது ....!!!

அவர்கிட்ட பேசிட்டு இருக்கறப்பர எங்க இருந்தது இறக்கை முளைச்சு வந்தாங்கனு தெரியலை ஒருவேளை கழுகா இருக்கலாம் ( ஜூனியர் விகடன் கழுகு இல்லைங்க ) டக்குனு மூக்கு வேர்த்து என் முன்னாடி நின்னாங்க ஆருரானும் , கதிரும் . போய் உங்க பேரு அட்ரஸ் எழுதுங்கன்னு அன்பான உத்தரவ போட்டு என்னை நிலைகுலைய வைத்தார்கள் . பின்ன எட்டாவது படிக்கறப்ப பேனா புடிச்சு எழுதின கை இப்ப போய் எழுத சொன்ன !!! அத எல்லாம் ஒருவழியா கஷ்ட பட்டு இஷ்டதோட எழுதிட்டு திரும்பினா நண்பர்கள் அவர்களின் அழகானக இளம் தளிர்களை வரவேற்ப்பு கொடுத்த இடத்தில் நிற்கவைத்து பழமை பேசி அவர்களின் புத்தகத்தையும் குறிப்பு எடுக்க சிறிய நோட்டு ஒன்றையும் கொடுத்து உள்ளே அனுப்பி விட்டார்கள் . நாம கொஞ்சம் சொகுசு பேர்வழிங்க போனதும் உள்ளார ஒரு மூளையோராம பாத்து ஒரு இடத்தை புடிச்சு ஒக்காந்துட்டேன் . ஆனா அப்பறமா நான் வெட்கப்படும் அளவிற்கு ஆளாளுக்கு ஒரு ஒரு வேலைய இழுத்துபோட்டு செய்யறாங்க .

இது என்னடா வம்பா போயிருச்சு நம்மளையும் வேலைசெய்ய வச்சுருவாங்களோனு அங்கலாப்போட கமுக்கமா போய் கதிர் அண்ணன் பக்கத்துல நின்னேன் . அவரு சாதரணம கணபதி இந்த பிளக்குல கரண்டு வரலை அதுல வருதனுபருங்க மொத வேலைய கொடுத்தாரு . சரிடா இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை போலன்னு நினைச்சு எதோ பன்னுவோமு ஆரம்பிச்சேன் . பாத்தா நான் ஒருத்தன் மட்டும் தான் எரும மாடு மாறி அசையாம நிக்கறேன் .சந்துரு அண்ணன் ஆருரான் கதிர் கார்த்தி ஜாபர் ன்னு எல்லாரும் பறந்தடிச்சு வேலை செய்யறாங்க. அத பாத்ததும் புது பொண்ணு வெட்கப்பட்டு மாமியார் வீட்டுல ஒளிஞ்சு இருக்குமே அந்த வேட்டகம் மொத ராத்திரி முடிஞ்சதும் காணாம போயிருக்கும் அதுமாறி இவிங்க காட்டின செயல் வேகத்துல எனக்கும் தொத்திகிச்சு . நான் வேலை செய்யரமாறி நடிக்க ஆரம்பிக்கறப்ப எல்லாரும் ஒரு ஒருத்தரா வர ஆரம்பிச்சாங்க . எங்க ஆளுங்க விழ நடந்த இடத்துக்கு வரதுக்கு கார் எல்லாம் கொடுத்து அசத்தி இருந்தது எனக்கு அப்பறம்தாங்க தெரிஞ்சுது . ஜாபர் இந்த விசியத்துல அசத்திட்டாருனு எல்லாரும் சொன்னப்ப பயங்கரமான சந்தோசம். பாலாசி துடுக்கு துடுகுனு தலேர் மொகந்தி பட்டுமாரி துடிப்ப வேலை செய்துட்டு இருகாரு சந்துரு அண்ணன் அத விட கலக்கறாரு கதிரன்னையும் ஆருரான் அண்ணனையும் சொல்லவேண்டியதே இல்லை செயல் புயல்கள் , கார்த்தி இவர பத்தி ஒரு தனி பத்தில சொல்லணும் .

இந்த கார்த்தி ஒரு ஒன்றை வருசமா சொல்லிட்டே இருக்காரு டகிலா ஒரு பாட்டில் இருக்கு ஒரு பாட்டில் இருக்குனு ஆனா கண்ணுல இன்னும் காமிக்கவே இல்லை . :( யாருகிட்டயாவது காமிச்ச எனக்கும் கொஞ்சம் சொல்லிவிடுங்க ஜோதில ஐக்கியம் ஆயிக்கறேன் . சாப்பாடு எல்லாம் போட்டுட்டு இருக்காங்க பாத்தா சூப்பரான பாயாசத்தை சுவைக்க கப்பு இல்லை உடனே ஓடு வாங்கியானு சொன்ன அப்பவும் மனுஷன் நாயா பேயா பறந்து அடிக்கறாரு . இப்படி எல்லாரும் ஆளாளுக்கு சிறப்ப அவங்க அவங்க பங்களிப்பை வழங்கி எனக்கும் நல்ல பேர கடைசி நேரத்துல வாங்கி தந்தாங்க .

நான் சென்னைல இருந்தது புதன் கிழமை ஈரோடுக்கு போனேன் . வெள்ளிகிழமை கதிர் அண்ணன பாத்தேன் அவளவுதான் அடுத்து ஞாயத்து கிழமை அங்க போனேன் . எல்லாரும் இதனை அர்ப்பணிப்போட ஈடுபட்டத பாத்ததும் ஒரு பெரிய சபதம் எனக்கு நானே எடுத்து கிட்டேன் அது ரகசியம் அடுத்த சங்கமம் அப்ப சொல்லறேன் .

சரி இன்னொரு விசியம் . என்ன என்னமோ எல்லாரும் பேசினாங்க சொன்னங்க சிறப்பு விருந்தினரவந்தவங்க எல்லாம் .எனக்கு ரொம்ப புடிச்சது கருவாயன்  போட்டோ எடுக்கறத சொல்லிகொடுத்து மட்டும் தான் மத்த படி எனக்கு ஒன்னும் புடிகலைங்க . ஆனா வந்திருந்தவங்க எல்லாம் ரொம்பவே ஆழ்ந்து கவனிச்சு தெரிஞ்சுகிட்டாங்க எல்லாரும் பேசினத. கடைசியா சேர்தளம் அமைப்பினர் ஏற்ப்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கலகலப்பா எல்லோரோட எண்ணங்களையும் வெளிப்படுத்தும் பின்னுட்டமாய் அமைந்திருந்தது .

வந்திருந்த எல்லோரும் விடை பெறுகிறார்கள் மணம் என்னமோ வெறுமையை எடுத்து பூசிகொண்டது .

அடுத்து விழ அரங்கை அரங்கத்தாரிடம் ஒப்படைக்க திரும்பவும் ஆளாளுக்கு வேலையை இழுத்து போட்டு கொண்டார்கள் . இப்பவும் நான் சும்மா இருந்த அர்த்தம் இல்லை என்று எனக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை காண்பிக்க ஒரு தண்ணீர் கேனை எடுத்து வண்டியில் வைத்து இவர்களின் வேளையில் என்னையும் ஈடுபடுத்தி கொண்டேன் .

எல்லாம் ஒரு வழியா இனிதே முடிஞ்சு மன வருத்தத்தோட இருந்தப்ப கதிரண்ணன் வந்து ஒரே ஒரு லார்ஜ் அப்படின்னு சரக்க ஊத்தராறு .எனக்கு கொஞ்சம் சங்கடம் என்னதான் நாம கிரீன் பார்க் எஸ்கேப் பார்ல குடி இருந்தாலும் எங்க சந்துரு அண்ணன் முன்னாடி எப்படி குடிகராதுன்னு . அப்பவும் தலைல துண்ட போத்தி குடிச்சு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் சென்ற மன வருத்தத்தை காணாம போகவசுட்டேன் . அப்பறமும் விட்டங்கள எங்க பாசகாரங்க கதிர் அண்ணன் ஆபீஸுக்கு கூட்டிட்டு போய் அங்கயும் . எல்லாம் முடிஞ்சு அவரர் கூடுகளுக்கு திரும்புகிறோம் எனக்கு விழியோரத்தில் வழிகிறது கண்ணீர் .............

2011 டிசம்பர் எங்க இருந்தாலும் சீக்கரமே எங்க ஈரோட்டுக்கு வந்து விடமாட்டாயா ..... இதே போல் ஒரு சந்திப்பு பகிர்வு எனக்கு உடனே வேண்டும்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

ஒளிரும் விளக்குகள் இருளும் வாழ்கை




அவசியமான நாம் அனைவரும் உணரவேண்டிய கட்டாயம் செயல்படுத்தவேண்டிய ஒன்று ஆனால் யாரும் கவனிப்பதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை . இன்றைய நவ நாகரீக உலகில் வேகம் மிக பெரிய பங்கு பெறுகிறது ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் அது வாழ்கையாக இருந்தாலும் வாகனமாக இருந்தாலும் சரி நமக்கு முன்னால் போகிறவரை எப்படியேனும் முந்தி செல்ல முயலுகிறோம் .

வாழ்கையில் வேகம் நமது சந்ததிகளையும் நமது நீட்சியையும் நிலைத்திருக்க பயன்படுகிறது ஆனால் , சாலையில் ?...

போக்குவரத்தில் நமது கவனம் எல்லம் எதிர் வரும் வாகனங்களை பற்றி எப்போதுமே இருப்பதில்லை . அதுவும் இரவில் நமக்கு அந்த அக்கறை ஒரு துளியேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே பயமாக இருக்கிறது .சாமான்ய மக்களை இருள் குற்றங்களை எல்லாம் மறைப்பதற்கு மட்டும் அல்ல செயல்படுத்தவும் தூண்டுகிறதோ என்ற கவலை எனக்கு . இரவில் தானே பாத்துகொள்ளலாம் எனும் அலட்சியம் தான் உச்ச பட்ச விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது . அது நகரமோ கிராமமோ நெடுச்சலையோ எந்த இடத்தில் பார்த்தாலும் எந்த வாகனத்தை பார்த்தாலும் மிக பிரகாசமாக முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கிறார்கள் எதிர் வரும் வாகனகளுக்கு இதனால் இடையுறு ஏற்படும் எனும் அக்கறையோ கவலையோ இன்றி. இத்தனைக்கும் இவர்களும் இனொரு புறத்தில் எதிர்வரும் வாகனம் என்பதை புரிந்து கொள்ள மறுகிறார்கள் . 
 


முன்பெல்லாம் இது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது . வாகன ஓட்டிகளும் ஹய் பீம், லோ பீம் இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து ஓட்டுவார்கள் அதுபோக முகப்பு விளக்கில் கருப்புவண்ண பட்டையையோ அல்லது வட்ட பட்டையையோ வாகனத்திற்கு தகுந்தாற்போல் ஒட்டி இருப்பார்கள் . எதிர் வரும் வாகங்களுக்கு அந்த பிரகாசமான ஒளியால் கண்கள் கூசுவது தடுக்கப்பட்டு சாலையும் தெளிவாக தெரியும் . ஹய் பீம் ஒளியை ஒளிரவிட்டு வரும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்திருக்கு தான் வருவதை தெரிவிக்கவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் எதிர் புற சாலை தெளிவாக தெரியும் வண்ணம் லோ பீம் விளக்குகளை பயன்படுத்துவதே இல்லை .

இந்த விசியத்தில் கனரக வாகன ஓட்டிகள் நிச்சியம் பாரட்டபடவேண்டியவர்கள் அவர்கள் இதனை சர்வ நிச்சியமாக கடைபிடிகிறார்கள் .அதிகமாக நெடுஞ்சாலையில் பயணிப்பவன் அதுவும் இரு சக்கர வாகனத்தில் என்பதால் அறுதியிட்டு கூற முடிகிறது .... பெரும்பாலான ஓட்டுனர்கள் எதிர் புறம் வரும் வாகனம் இருசக்கரமாக இருந்தாலும் கண்களை கூசுகிறது உங்கள் முகப்பு விளக்கை குறைந்த ஒளிக்கு மாற்றுங்கள் என்பது போல் நமது வாகனத்தின் முகப்பு விளக்கை அனைத்து போட்டால் அவர்கள் குறைந்த ஒளிக்கு உடனே மாறி விடுகிறார்கள் . சில வாகன ஓட்டிகள் அவர்களை நாம் கடக்கும் வரைக்கும் சில நொடிகளுக்கு முகப்பு விளக்கை அனைத்து விடுகிறார்கள் . ஆனால் இந்த நகர் புறத்தில் இருக்கும் பேருந்து , மற்றும் மகிழ்வுந்து ஓட்டிகள் இதற்க்கு எல்லாம் கண் சாய்ப்பதே சிமிட்டுவதே கிடையாது . நகர் முழுக்க பிரகாசமான தெரு விளக்குகள் எறிந்தாலும் சாலை மிக தெளிவாக தெரிந்தாலும் அவர்களின் வாகனத்தின் முகப்பு விளக்கு மட்டும் ஏன் இத்தனை பிரகசாமாக எரிகிறது ?.. இப்போது மழை பெய்து சாலைகளும் தெருக்களும் குண்டும் குழியுமாக இருக்கிறது . எதிர் புறம் பிரகாசமாக வரும் வாகங்களின் கண்ணை கூசும் ஒளிகளால் அந்த குண்டும் குழியுமான சாலை கண்ணனுக்கு தெளிவாக புலப்படுவதே இல்லை . கவனிக்காமல் பழக்கம் இல்ல சாலைகளில் சென்றால் நிச்சியம் விழுந்து எழவேண்டியது தான் .


முகப்பு விளக்கின் கண்ணாடியில் நிச்சியம் கருப்பு பட்டையையோ அல்லது கருப்பு வட்ட பட்டையையோ ஒட்டி இருப்பதை காவல் துறையினர் இதனை எல்லாம் முறைபடுத்த்வதில்லை அவர்களுக்கு இதற்கு எல்லாம் நேரமும் இருப்பது இல்லை அவர்களுக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் , வீர தீர சாகசம் போன்ற தமக்கு தாமே பட்டம் வழங்கி கொள்வதற்கே நேரம் போதவில்லையாம் . அவர்களை கடிந்து நாம் என்ன செய்ய முடியும் . நாமது இதனை எல்லாம் சரி செய்யலாமே நமக்கு நாமே கொஞ்சமேனும் இதனை பின்பற்றினால் எதிர்வரும் வாகன ஒட்டிகளும் உணருவார்கள் . நமக்கு சாலை பிரகாசமாக வேண்டி எதிர்வரும் வரும் வாகன ஓட்டிகளுக்கு வாழ்க்கையை இருளில் தள்ளாமல் இருக்கலாமே நாமாவது .




அப்பறம் நீங்க எல்லாம் எங்க ஊருல நடக்கற ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்-2010 நிகழ்விற்கு வருகிறிகள் தானே ... உங்களை எல்லாம் எண்ணத்தாலும் எழுத்தாலும் சந்தித்திருந்தாலும் உருவமாக உணர்வாக சந்திக்க போகும் நிகழ்வை நானும் ஆர்வமுடனும் ஆசைகளுடனும் எதிர் நோக்குகிறேன் .




இடம்:
டைஸ் & கெமிக்கல் மஹால்
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு