பக்கங்கள்

ஞாயிறு, 30 மே, 2010

பெண் ஏன் அடிமையானாள் ?..


  தலைப்பை பார்த்தவுடன் பெரியார் தாசர்கள் கொஞ்சம் சந்தோசபடலாம் .அடிக்கடி கருஞ்சட்டை காரர்களிடம் இடிவாங்கும் பார்ப்பனர்கள் கொஞ்சம் வருத்தபடலாம் . நான் இங்கே இருவரை பற்றியும் எழுதவில்லை மதங்கள் கூறுவதை பற்றியும் எழுத வில்லை .கொஞ்சம் என் அறிவிற்கு எட்டிய என் சிந்தனையில் உதித்த நான் பார்த்த நான் அனுமானித்த என்னால் உணரப்பட்டதன் மூலம் எழுதுகிறேன் . பெண் இப்படித்தான் அடிமையாகி இருக்கவேண்டும் என்று . ( நான் நான் ன்னு சொல்லறேன்னு தப்பா நினைக்காதிங்க நான் ஒன்னும் பெரிய ஆளு இல்லைதாங்க )

    சரி விசியத்திற்கு வருவோம் , பெண் இந்த சொல்லை உதிர்க்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஒருவேளை நான் ஆண் என்பதாலோ ( வாங்க பாத்தியா இந்து மாதம் பெண்ணை எப்படி பாக்க வச்சுருக்கு ன்னு சொல்லற கருஞ்சட்டை காரர்களே... மதத்தை விடுத்தது பாருங்கள் உங்கள் ஆண் குறி கூட எழுந்து நிற்கும் பெண்ணின் அங்கங்களை பார்க்கும் போது ) . ஆண் பெண் என்பது என்னை பொறுத்தவரை இரண்டு உயிர்கள் உடற்கூறு ரீதியாக அங்க அவையங்கள் மட்டுமே மாறு பட்ட மனித உயிர்கள் . இதில் ஆண் மட்டும் என்ன உசத்தி பெண் மட்டும் என்ன தாழ்ந்தவள் ?.. இந்த கேள்வி எப்போதும் என்னை குடைந்துகொண்டே இருக்கும் . காரணம் அது என்ன எல்லாமே ஆண் மட்டும் செய்யணும் பெண் மட்டும் சுகமா இருந்துக்கற ஆனா பெண் அடிமைத்தனம் ( இத எப்படிங்க சொல்லறது ஆண் அடிமைத்தனமா இல்ல பெண் அடிமைத்தனமா ) ஆண் அடக்கி ஆளுகிறான் பெண் அடங்கி போகிறாள் என்று நாவிருக்கும் உதடுகள் எல்லாம் கூச்சல் கூப்பாடுகள் அப்படி என்னதான் ஆண் அடிமை படுத்தி வைத்திருக்கிறான் பெண்ணை என்று பார்த்தல் பெரியதாக ஒன்றும் தோணவில்லை .அட உண்மையாலும் தாங்க சொல்லறேன் ஆண் ஒன்னும் பெரிசா பெண்ணால வெளிய வர முடியாத அளவிற்கு ஒன்றும் அவளை ஆளவில்லை அவளே அவளுக்கு அடங்கி கொள்கிறாள் பலியை தூக்கி ஆண் மீது போட்டுவிட்டு அதற்கும் துளி கண்ணீர் சிந்துகிறாள் . அவளால் ஆண் செய்யும் எதனையும் செய்ய முடியும் ஆனால் அவள் செய்ய மாட்டாள் ( வாங்க இப்பதான் நாங்க எல்லா துறையுளையும் முன்னுக்கு வந்துட்டு இருக்கோமே ன்னு சொல்லாதிங்க இன்னும் முனேருங்க இப்ப நீங்க பண்ணறது எல்லாம் கொசுறு ) அவளுக்கு என்றைக்குமே பலி போட ஒரு ஜீவன் வேண்டும் நாய் பூனை எல்லாம் வேலைக்காகாது இன்னொரு மனிதனாக இருந்தால் தான் வசதி ( எப்பவும் ஜெய்க்கனும் அப்படின்னு போட்டி போடறவங்க தன்னை விட பலம் குறைந்தவர்களிடம் தான் போட்டி போடுவார்கள் அப்படித்தான் பெண்ணும் அவளை விட பலம் குறைந்த ஆணிடம் போட்டி போடுகிறாள் ) காரணம் மிருகங்களிடம் போட்டி போட்டு ஜெயிப்பது என்பது கடினம் ஆனால் ஆண் எப்போதுமே பெண் என்பதால் கொஞ்சம் கருணை காட்டுகிறான் சரி பரவாயில்லை என்று . இத்தனைக்கும் அவள் தன்னை போல் ஒரு மனித உயிர் என்பதை அறிந்திருந்தும் .

ஏன் ஆண் கருணை காட்டுகிறான் ?. பெண் ஏன் தன்னை ஆண் போல வளர்த்துகொள்லாமல் இருந்தது விட்டால் ?.. 

    இதற்க்கான காரனத்தனை ஆராயும் போது எனக்கு புலப்பட்டது இது தான் . இதனால் தான் பெண் தனுக்கு தானே அடிமையாகி கொண்டு ஆண் மீது பலி சுமத்தி விட்டாள் . இத்தனைக்கும் பெண்ணுக்கு பரிணாமம் ஏனைய சுதந்திரத்தை கொடுத்திருந்தும் அதனை எல்லாம் அவள் பயன்படுத்தி கொண்டதே கிடையாது . பரிணாம சுதந்திரமே ஆணுக்கு கிடையாது என்பது என் வதம் . 

    சரி அது என்ன காரணம் ?. அந்த காரணமா பெண்ணை அடிமை படுத்தி வைத்திருகிறது என்று கேட்டாள் நான் ஆம் என்று சொல்லுவேன் .கேவலம் ஒரு காரணமா அவளை அடிமை படுத்தி வைத்திருகிறது பிறகு ஏன் அவள் ஆண் அவளை அடிமை படுத்தி வைத்திருக்கிறான் என்று கூறுகிறாள் என்றால் அவளுக்கு இப்படி பலி போட்டு பலி போட்டு அவனை எப்போதும் அவளிடம் சூழ்நிலை கைதியாகவே வைத்திருக்க இந்த சொல் இன்றியமையாமல் இருப்பதனால் தான் . அட காரனத்த சொல்ல மாட்டையா என்று கோவ படாதிர்கள் அதற்க்கு தான் வருகிறேன் . 

    மனிதன் காட்டண்டியாக வாழ்ந்த போது அவனுக்கு தெரிந்த தொழில் வேட்டை . ( நான் உலகின் முதல் தொழில் விபசாரம் என்று எல்லாம் நம்ப மாட்டேன் ) இங்கே மனிதன் என்பது ஆண் பெண் இருவரையுமே குறிக்கும் . அவன் வேட்டை தொழிலுக்கு போகும் போதெல்லாம் அவளும் போவாள் காரணம் அப்போது இருவருமே போனால் தான் உணவு . எப்படி இப்ப எல்லாம் ஆண் பெண் இரண்டு பேருமே வேலைக்கு போனத்தான் கொஞ்சம் சொகுசா வாழ முடியும்னு நினைகரமோ அது மாறி. இப்பவாது சொகுசா வாழவும் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் அது இதுன்னு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் மணிதான் காட்டன்டியாய் வாழ்ந்த போது அவனது தேவைகள் மிக குறைவு ஏன் ஒன்றே ஒன்று தான் அது உணவு .அந்த உணவுக்கான வேட்டை தொழிலுக்கு மனிதன் போகுபோதேல்லாம் சில சமையம் அவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட மிருகங்கள் அவனை தாக்க தொடங்கின . அதானால் அவன் மிகுந்த அச்சம் கொண்டவன் ஆனான் ( இங்கே தான் பரிணாமம் மனிதனுக்கு தேவையான ஆதர உணர்ச்சியான பயத்தை அறிமுக படுத்தி வைத்திர்க்கலம் ) அவ்வாறு மிருகங்கள் அவனை தாக்குவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கினான் . பெண் சில நாட்களுக்கு மட்டும் சோர்ந்து போய் திறன் குறைந்து இருப்பது தான் தான் காரணமாக இருக்குமோ என்ற உணர்வு தோனுகிறது அந்த நம் முன்னோர் காட்டாண்டி மனிதனுக்கு .அதிலும் அவனுக்கு சந்தேகம் அவள் திறன் குறைந்து இருப்பதை பார்த்த மிருகங்கள் அவனை வேட்டையாடுகிறது என்று . பிறகு கண்டு உணர்ந்தான் . ரத்த வாடை தான் காரணம் என்று . சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பெண்ணிடம் இருந்தது உதிரம் வெளியேறுகிறது அந்த சமையங்களில் பெண் திறன் இல்லாமல் போய்விடுகிறாள் மற்றும் அந்த ரத்தவாடை கண்டுதான் மிருகங்கள் அவனின் இருப்பிடத்தை கண்டு கொண்டு அவனை தாக்குகிறது என்பதை .இனி பெண் தன்னுடன் வந்தால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்று அஞ்சி அவளை தடுத்து நிறுத்துகிறான் . அவளை தங்க வைக்க பாதுக்காப்பான இடமமைத்து அங்கேயே இருக்குமாறு பார்த்துகொள்கிறான். அவளும் மிருகங்களிடம் இருந்தது தானை காத்து கொள்வதற்கு அந்த ஏற்பாட்டை ஏற்று வேட்டைக்கு செல்வதில் இருந்தது விலக்கு பெறுகிறாள் . அதுவும் மாதத்தில் சில நாட்கள் நடக்கும்  இயற்க்கை சுழற்சியை சாதகமாக அவள் புத்தி பயன்படுத்திகொண்டது. வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை சாப்பாடு துணிமணி எல்லாம் வந்துரும் அப்படின யாரு வென சோம்பேறி ஐடலம் இல்லைங்கள அதுமாரி பெண் கொஞ்சம் கொஞ்சமாக சுகவாசி ஆக தொடங்குகிறாள் ஆண் கஷ்ட பட்டு வேட்டையாட சென்று வேட்டையாடி வீட்டில் சும்மா இருக்கும் பெண்ணுக்கு என்று உணவு வழங்க ஆரம்பித்தானோ அன்றே அவள் மெல்ல மெல்ல அடிமை ஆக தொடங்குகிறாள் .இத்தனைக்கும் அவள் ஆணுக்கு சளைத்தவள் இல்லை என்று தெரிந்தும் . ஆணுக்கும் கஷ்ட படுவது நான் தானே இவள் சும்மா தானே இருக்கிறாள் என்று அவளை ஆள முற்ப்படுகிறான் .அவளும் அதற்க்கு இடம் கொடுத்து விடுகிறாள் காரணம் உயிர் வாழ உணவு தேவை அந்த உணவு வேலை செய்யாமல் வேட்டையாடாமல் இருக்கும்போது ஆணால் அவளுக்கு கிடைகிறது என்பதால் .இப்படியே அவள் மெல்ல மெல்ல தொடர பரிணாமம் அவளை அவளின் திறன்களை எல்லாம் குறைக்க ஆரம்பித்து பின் ஒட்டுமொத்தமாக பெண்ணை மெல்லிய உடல்வாகு கொண்டவளாக மாற்றி விட்டது .இதனையே சாக்காக வைத்து அவளும் தன்னை வளர்த்தி கொள்ளாமல் ஆண் மீது பழிசுமத்தி வாழ பழகி கொண்டாள்.

   நாகரீகம் வளர ஆரம்பிக்கிறது பெண் மாத சுழற்சி நாட்களில் விரைவில் நோய் தொற்றுக்கு ஆளாக ஆரம்பிக்கிறாள் அதனால் மரணம் அடையவும் செய்கிறாள் . அதுவரை வீட்டு வேலை என்று சிலவற்றை அந்த மாத சுழற்சி நாட்களிலும் அவள் செய்துவந்தால் . மனிதன் பார்த்தான் இப்படியே இவள் நோய் தொற்றுக்கு ஆளாகி வந்தால் நமக்கு சந்ததி தொடராதே என்று கண்டுகொண்டு அந்த நாட்களில் அவளுக்கு முழு ஓய்வு கிடைக்குமாறு பார்த்து கொள்கிறான் அவளுக்கு தானியான இடம் சுகாதாரமாக வழங்கி . இதனை எப்படி செயல்படுத்துவது அப்போது எதோ ஒரு மனிதனுக்கு தோன்றிய எண்ணம் தான் கடவுள் கோவித்து கொள்வார் தீட்டு என்று அவளை கட்டாயபடுத்தி முழு ஓய்வுக்கு அனுப்புகிறான் .அவளும் மரணத்திடம் நோய் தொற்றுக்களிடம் இருந்தது தன்னை காத்து கொள்வதற்காக மனிதன் இட்ட கட்டளைக்கு இசைந்து கொள்கிறாள் . அதுவரை அவள் புதிய உயிரை  படைக்கும் மேலானவள் என்று நம்பி வந்த மனிதன் கொஞ்சம் காழ்புணர்ச்சி கொண்டு இருந்தான் அவளை எப்படி நமக்கு கீழ் என்று உணர வைப்பது என்று அவனின் சிந்தனை பரிணாம வளர்ச்சி அடைந்து எதவது ஒரு புது புது காரணத்தை அவளுக்கு கொடுத்து அவளை எளிமை படுத்தி அடக்க ஆரம்பித்தான் பெண்ணும் சுலபாமா இருகிறதே என்று அடங்கிகொள்ள ஆயத்தமானால் . இப்படி தான் பெண் அடிமையாகி இருக்க வேண்டும் . சர்வைவல் தான் காரணமாக எனக்கு தெரிகிறது . மத்தபடி பெண் ஆணுக்கு ஒன்றும் சளைத்தவள் கிடையாது அவளால் எல்லாமே செய்ய இயலும் அவளும் சில பல சந்தர்ப்பங்களில் அவளை நிருபித்து கொண்டுதான் இருக்கிறாள்.அவளை அவளே உந்தித்தள்ளி கொண்டாள் ஒழிய பெண்ணடிமை என்னும் மாயவலையை தாண்டி ஒட்டுமொத்த பெண் இனம் வெளிவராது என்பது எண்ணம் . 

நன்றி இத்தனை நேரம் இதனை படித்தற்கு பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறேன் . கொஞ்சம் உணர்சியவ படாமல் உணர்வு பூர்வ அணுகுமறை பின்னுட்டங்களை . 

திங்கள், 24 மே, 2010

போக்குவரத்து ....

சொல்லறதுக்கு சுலமாப இருக்குங்க இந்த வார்த்தை . அனால் இன்று இந்த வார்த்தை உபயோகிப்பதை போல் அத்தனை சுலபமாக இருப்பதில்லை நமது அன்றாட போக்குவரத்து . முன்மெல்லாம் பயண நேரம் மிக அதிகமா இருந்தாம் தாத்தா பாட்டி எல்லாம் கதை சொல்லுவாங்க . வண்டி பூட்டி போகணுமாம் அதும் எப்படி காலைல ஒரு விசேசத்துக்கு கிளம்பனும்ன நள்ளிரவே பயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமாம் . எத்தனை தூரம்னு நினைச்சிங்க ஒரு இர்வத்தி அஞ்சு கிலோ மீட்டர் . அப்பா எல்லாம் அத்தனை கஷ்டமா இருந்து போக்குவரத்து . இவங்களுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க எல்லாம் நடை போட்டு போயிருப்பாங்க நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னைக்கு நாம இருக்கற போக்குவரத்து சூழலை பார்க்கும் போது.

சிநேகிதி ஒருத்தி லண்டன்ல இருக்க டேய் நான் ஏர்போர்ட் ல இருக்கேன் நாளைக்கு நைட் வந்து சேன்தீருவேன் என்ன பிக் அப் பண்ணிக்க அப்படின்னு சொல்லுவா . இனொரு நண்பன் இருக்கான் அவன நான் " பிளைட் மிஸ் பண்ணி " ன்னு சொல்லுவேன் . காரணம் டொமஸ்டிக் பிளைட் தானடா ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி இருந்த போதும்னு சொல்லியே மிஸ் பண்ணிருவான் . நான் மட்டும் என்னவாம் . 3.45 இகு கோவை ஈரோடுல இருந்து கிளம்பும் நான் 2.30 இகு வீட்டுல இருந்து கிளம்புவேன் .24 கிலோமீட்டர் தான 30 min ல போய்கிடலாம்ன்னு நினைச்சு கிளம்புவேன் ஆனா பாருங்க நான் லேட்டா ஐடுவேன் எப்பவும் முப்பது நிமிஷம் லேட்டா வர கோவை எக்ஸ்பரஸ் அன்னைக்குனு பாத்து சரியான நேரத்துக்கு வந்து சரியான நேரத்துல கிளம்பி போயிருக்கும் . எல்லாம் தலைஎலுத்துனு அடுத்த ரெய்ல புடிக்க உக்காந்துக்குவேன் சிவனேன்னு . சரி இது கூட என்னைக்காவது நமக்கு நடக்கராதுன்னு நினைச்சா தினம் தினம் நடக்குதே ஒரு ட்ராபிக் ஜாம் . அட போடா பேசாம நாம செத்து போய்டலாம்னு தோணும் . அதும் இந்த வெய்யல் காலத்துல போக்குவரத்து நெரிசலில் மாட்டிகிட்ட அவளவுதான் பொரிக்கவோ வறுக்கவோ தேவையே இல்லைங்க . அப்படியே சாப்பிடலாம் மனித கறியை . அந்த அளவுக்கு சூரியன் சுட்டு எரிக்கறது இல்லைங்க !!! நாம எல்லாரும் சேந்து உபயோகிக்கற வாகனத்தின் வெப்பமும் சூரியனோட சேந்து கொடுமையான வெப்பத்தை உண்டாக்கி நமை வேக வைக்குது ( ஹ்ம்ம் எப்படியும் அடுத்த வருசத்துக்குள ஏசி கார் ஒன்னு வாங்கினாதான் சமாளிக்க முடியும் போல ).

இத்தனைக்கும் நாம இன்னைக்கு இருக்கற கால கட்டம் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறோம் . அனால் இப்போதெல்லாம் அப்படி பயணபட முடிகிறாத என்ன ?.. என்னைக்காவது சுற்றுலா போறதமட்டும் சொல்லலைங்க தினசரி போக்குவரத்தை தான் சொல்லுகிறேன் . அதுவும் தருமமிகு சென்னையில் பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் போது தான் தெரிகிறது எந்த காலத்டத்தில் வாழ்கிறோம் என்று பத்து கிலோமீட்டர் தொலைவு செல்ல இன்று ஒரு மணிநேரம் ஆகிறது . அத்தனை போக்குவரத்து நெருக்கடி யாரை குறை சொல்லலாம் ?...

ஐய்யா நான் குறை சொல்லரதுக்குனே சில பல ஜீவன்கள் இருக்குதே . அது எல்லாம் யார் யார் ன்னு பாக்கலாமா ?..

1 ) . நீல்மெட்டல் பனால்கா ( இவங்க குப்பை அல்லராங்கள இல்ல குப்பை போடராங்கலானு யாரவது சொல்லுங்க பாக்கலாம் ..

2 ) . மாநகர போக்குவரத்து கழகம் ( ஹ்ம்ம் இவங்கள என்ன சொல்றது போங்க )

3 ) . சென்னை போக்குவரத்து காவல் துறை ( இவங்களுக்கு என்னைக்கு தான் சரியான புத்தி வருமோ .)

4 ) . நாம துணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் . ( பாலம் கட்ட்டிடே இருக்காருங்க )

5 ) . சென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ ( வேற வழி இல்லை இவங்க பண்ணறத பாக்கறப்ப )

6 ) நடைபாதை வியாபாரிகள் ( இது என்ன சொற்றொடர் ?.!!! சரியான பதம் தான யாரவது தமிழ் ஆர்வலர் சொல்லுங்களேன் )

7 ) . விதிமுறை மீறிய கட்டிடங்கள் ( கொஞ்சத்த காச சும்மா விடமுடியுமா இடிக்கறதுக்கு சொல்லுங்க பாவமில்லையா அவிங்க )

8) விதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் ( உதாரணம் அசோக் நகர் சரவணாபவன் )

9 ) நிறுவனங்கள் வாரியங்கள் :- ( யாருக்காக தோண்டறாங்க நமக்கதன .. நாம வீட்டுல கரண்டு வேணும் தொலைபேசி வேண்டும் கண்ணீர் விடவும் மாண்ட மயிலாட மார்பாட நிகழ்ச்சியை பார்க்க கேபிள் வேண்டும் அந்த நல்ல எண்ணத்துல தான தோண்டறாங்க )

10 ). நீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் ( ஆமாங்க நாம்தான் மிக பெரிய கரணம் இத்தனை பெரிய போக்குவரத்து நெரிசலுக்கு )
 
சரி இவங்களோட குறைகள் என்ன என்ன ஒன்னு ஒன்ன சொல்லறேன் கேளுங்க .

நீல் மெட்டல் பனால்கா : இவங்க ரொம்ப சரியா பீக் அவர் ன்னு சொல்லற நேரத்துலதான் குப்பை அல்லுவாங்க அதை எல்லா பக்கமும் கொட்டிட்டே போவாங்க

மாநகர போக்குவரத்து கழகம் : பாதி நெருக்கடி இவங்க தராது தான் சரியான வேகத்துலியே சரியான நிறுத்ததிலையோ சரியான வழிதடத்திலையோ இவர்களின் ஓட்டுனர்கள் பேருந்தை செலுத்துவதே கிடையாது

சென்னை போக்குவரத்து காவல் துறை : இவங்களுக்கு என்னைக்கு தான் புத்தி வருமோ தெரியலை இன்னைக்கு எத்தனையோ தொழில் நுட்ட்பம் வந்தாச்சு இவங்க பண்ணற அக்கபோரு சரிபன்னறேனு சொல்லி ஐயோ கடவுளே பேசாம என்ன யாரவது ஆள் வச்சு அடிச்சு கொன்னுரு.

துணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் :- ஐய்யா நீங்க பாலம் எல்லாம் கட்டறீங்க அதுக்கு ஒரு பெரிய கும்பிடு ஆனா அந்த பாலம் எல்லாம் இன்னும் எத்தனை வருசத்துக்கு நெருக்கடிகளை சமாளிக்கும் அதும் இப்ப செனடாப் ரோடு ல கட்டி இருகின்களே அந்த பாலத்துல உங்கள என் பைக் பின்னாடி உக்காரவச்சு ஓட்டிட்டு போகணும் ஆசையா இருக்கு ஆனா துனைமுதல்வரை கொன்ற தற்கொலை கொலையாளினு தினத்தந்தில பேரு வந்து என் குடும்ப மானம் போயிருமேன்னு பயமா இருக்குங்க .

சென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ :- ஆடோகார அன்பர்களே நீங்க சர் பூர் ன்னு போறதால முண்டி வழி விட்டு போகததினால் எதனை நெருக்கடி தெரியுங்கள.கொஞ்சம் அனுசரிங்க அண்ணாச்சி நீங்க இல்லேன்னா நிறையபேருக்கு போக்குவரத்தே இல்லைதாங்க ஆனா அதே மாறி உங்களால நிறைய பேரு பதிக்க படரோமுங்க .

நடைபாதை வியாபாரிகள் :- ஏங்க நீங்க எல்லாம் " நடைபாதைல " கடை போட்டு உக்கதுக்கரிங்க உங்க பொழப்பை பாக்கறதுக்கு நடந்து போறவங்க ரோடுல போறாங்க அவங்க பொழப்ப பாக்கறதுக்கு ரோடுல போகவேண்டியவங்க அவங்க பொழப்பை பாக்கமுடியறது இல்லைங்க காரணம் நடை பாதையில் நடக்கவேண்டியவர்கள் ரோட்டில் நடப்பதால்.

விதிமுறை மீறிய கட்டிடங்கள் :- உங்களுக்கு ரெண்டு அடி அதிகமா கிடைக்குதுன்னு எடுதுக்கரிங்க ரோடு விரிவாக்கம் பண்ணனுமேன்னு நினைச்சு வந்த அப்படி இடமே இல்லையே இங்கனு நினைகரமாரி சுத்தி வளைச்சு போது இடத்தை அபகரிச்ச எப்படிங்க .

விதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் :- இத ஏற்று கொள்ளவே முடியாது காவல்துறை ஆணையர் இதற்க்கு என்ன பதில் சொல்லுவார் ?.. இல்லைன்னு சொல்லமுடியாது . நான் ஒரு வராம சில குறிப்பிட்ட கடைகள் நிறுவனங்கள் அருகில் இருந்து காட்சி படம் எடுத்து வைத்து இருக்கிறேன் ஆதாரமாக . ரொம்ப சின்ன உதாரணம் . அசோக் நகர் பார்க் அருகில் நிறுத்த முடியாது ஆனால் அதனை விடுத்தது ஐம்பது அடி தாண்டினால் நோ பார்கிங் பலகையை காணலாம் சரவணா பவன் அருகில் அங்கு வரும் வாகனகள் பின்னல் வருவதும் முன்னால் போவதும் என்றும் பில்லர் அருகில் தரும் நெருக்கடி சாதாரண போக்க்வரத்தில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு சவுக்கடி.

நிறுவனங்கள் வாரியங்கள் :- ஐய நீங்க தோண்டுங்க நள்ளிரவில் வாங்க அது என்ன நெருக்கடி நேரத்தில் வந்து வேலை செய்யறிங்க நீங்க மக்களுக்கு சேவை தான செய்யறீங்க ?.. அப்பறம் குழி தோண்டி அதனை மூடியும் மூடாமலும் செல்வது அந்த குழியில் விடாமல் இருக்க வாகனத்தனை வளைத்து நெளிச்சு ஓட்டும்போது ஏற்ப்படும் விபத்து என்னக சொல்லறது இத.

நீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் :- ஆமாங்க நாம எல்லாருமே இதற்க்கு பொறுப்பாளிகள் தான் .போது போக்குவரத்தை அதிகரிக்க செய்தல் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தால் நெருக்கடி குறையும் நெருக்கடி குறைந்தால் நேரம் மிச்சமாகும் நேரம் மிச்சமானால் சொகுசு அதிகரிக்கும் .
 
நமது இந்திய பொருளாதாரம் மாமேதைகள் பொருளாதார சூறாவளிகள் புலிகள் சொல்லுவது போல் எல்லாம் இல்லைங்க உண்மையில் நமது இந்திய பொருளாதாரம் ஆயில் பொருளாதாரம் தான் . ஆயில் ( பெட்ரோல், டிசல் ,மண்ணெண்ணெய் , காஸ் ) பொருள்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வரிகள் தான் உண்மையில் நமது அரசாங்கத்தை இயங்க வைக்கிறது . நாம் பொது போக்குவரத்தை அதிகபடுதினாலே நமது அந்நிய செலாவணியும் மிச்சமாகும் அரசாங்கத்தின் சுமையும் மிச்சமாகும் .

ஒரு நபர் மட்டும் செல்லும் கார் அடுத்த தெருவுக்கோ அல்லது அருகாமை கடைகளுக்கோ இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் இருக்கலாம். இதனால் சுற்றுப்புறமும் மேன்மையடையும் நமது காசும் மிச்சமாகும் போக்குவரத்து நெரிசலும் குறையும் அரசாங்கத்தின் அந்நிய செலாவணியும் மிச்சமாகும் .

இதனை நேரம் இதனை படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க . எதாவது பலன் வந்தால் நிச்சியம் சந்தோஷ படுவேன் . நமது அடுத்த சந்ததிக்கு எதாவது விட்டு போகனுங்க எரிச்சலையும் ஆற்றாமையும் கோபத்தையும் அல்ல . நிச்சியம் இந்த போக்கு வரத்து நெரிசல் நம்மால் அவர்கள் மூளைக்குள் உளவியல் ரீதியாக பாதிக்க செய்யும் . யோசித்து பாருங்கள் அன்பர்களே

சனி, 22 மே, 2010

திரும்ப வாருங்கள் கார்த்திக்

இந்த பதிவை எழுதுவதன் நோக்கம் இத்தனைநாள் ஒரு நடிகர் தன்னை தொலைத்திருந்த காரணத்தினால் தான்.

அன்புள்ள நடிகர் கார்த்திக் அவர்களுக்கு நீங்கள் எனது இந்த பதிவை வாசிப்பிர்களா என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை ஆனால் எப்படியேனும் உங்களுக்கு இதே மாறியான கருத்துக்களை நேற்றிலிருந்து அதிகம் உங்களை நோக்கி புறப்பட்டதை நிச்சியம் அறிந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்.

என்னை பொறுத்த வரை நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலுக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறவன். அது தொழிலோ அரசியலோ கலைகளோ நட்பு அல்லது உறவுகளோ . நமக்கு ஒன்று அமைந்து விட்டால் அதில் நாம் முழு வீச்சுடன் இறங்கி அதன் நீள அகலங்களை நமக்கு ஏற்றால் போல் அமைதுகொள்கிறோம்.அப்படி பட்ட ஒரு சிறந்த இடம் சினிமாவில் உங்களிடம் மட்டுமே தனித்தன்மையுடன் இருந்தது . இடையில் நீங்கள் இல்லாத போது கூட அப்படி பட்ட ஒரு இடத்தை யாராலும் யோசிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனம் .

அலைகள் ஓய்வதில்லை படத்தில் இருந்தது நேற்றைய மாஞ்சா வேலு படம் வரை நீங்களே உங்களை ஒரு முறை சாதாரண சினிமா ரசிகானாய் இருந்தது பாருங்களேன் திரையில் தோன்றும் கார்த்திக் எத்தனை வசீகரம் கொண்டவர் என்று . அதுவும் என்னை போன்ற யாரொருவருக்கும் ரசிகானாய் இல்லாதவர்களுக்கு நீங்கள் திரையில் தோன்றிய உடனே சுடுநீர் கொதித்து கொப்பளிப்பது போல உள்ளம் உற்சாகத்தில் கொப்பளிக்குமே அதனை எல்லாம் சொற்களில் அடக்கிவிட முடியுமா என்பது தெரியவில்லை . இன்னமும் நீங்கள் MR. சந்திரமௌலி என்று கூறுவதையும் மைக் போட்டு சொல்லிய உங்கள் காதல் தைரியத்தையும் எத்தனையோ இளைஞர் கூட்டம் அவர்கள் காதலிகளிடம் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள் . உங்கள் சினிமா பாத்திரத்தில் மிக முக்கியமான திரைப்படமாக கோகுலத்தில் சீதை படத்தை நான் சொல்லுவேன் . ஏன் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆக சிறந்த ஒரு பாத்திர படைப்பாக உங்கள் கோகுலத்தில் சீதை படத்தை தான் நான் சொல்லுவேன் . எங்கே சார் போய் இருந்திருகள் இத்தனை நாட்களாக ?.. அரசியால வேண்டாம் சார் அது உங்களுக்கு வரவில்லை . எனக்கு தெரிந்து நீங்கள் ஒருவர்தான் கோடம்பாக்க வட்டாரத்தில் சக நடிகர் நடிகைகளை அழகான பட்டபெயர் வைத்து அவர்களை சந்தோஷ படுத்துவீர்கள் .  ( உதரணமாக வருஷம் 16 படத்தில் குஷ்பு அவர்களுக்கு  சைனிஸ்பட்லர் என்று அதனை இன்று வரை தொடர்வாதாக கேள்விபடுகிறேன் ) ஆனால் உங்களை அந்த அரசியல் வட்டத்தில் வேறு மாரியான பட்ட பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள் என்பது தெரியுமா ?.. சார் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாம் ஆனால் பூனையை பார்த்து புலி தன் கோடுகளை அழித்து கொள்ளலாமா ?.. வேண்டாம் சார் உங்களுக்கு இந்த அரசியல் .

நேற்று இரவு கமலா திரையரங்கில் உங்கள் புதிய படமான மாஞ்சா வேலுவை பார்த்தேன் சார் உங்கள் அறிமுக காட்சியில் திரைகதை படி சொக்கி போனவள் கதாநாயகி மட்டும் அல்ல சார் எங்களை போன்ற ரசிகர்களும் தான். இன்னமும் எத்தனை அழகாக சண்டை போடுகிரிகள் குறிப்பாக அந்த பிணவறை சண்டை காட்சிகள் . இன்னமும் அதே கவர்ச்சி எத்தனை எத்தனை பெண் ரசிகர்கள் வெட்கத்துடன் நீங்கள் " ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜ " பாடலுக்கு குறும்பு நடனம் ஆடிய போது ரசித்தார்கள் என்பதை அருகே அமர்ந்து பார்த்துகொண்டு இருந்தேன் சார் .

இடைவேளையில் ராவணன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒளிபரப்பினார்கள் ஐஸ்வர்யா , விக்கரம் என்று வந்த போது எல்லாம் அரங்கில் யாரும் விசில் அடிக்க வில்லை சார் ஒரு ஜீப்பில் நீங்கள் தொப்பியுடன் வருவீர்களே அப்போது அனைவரும் அடித்த விசில் சத்தம் உங்கள் வீடுவரை கெட்டு இருக்கும் என்று நம்புகிறேன் .

உங்களுக்கு இந்த திரையுலகில் யாரும் போட்டி இல்லை சார் உங்கள் இடம் என்றுமே காலியாக உள்ளது அந்த இடத்திருக்கு யாரும் வரவே முடியாது சார் உங்களை தவிர .



உங்கள் வருகை அந்த காலி இடத்தை இட்டு நிரப்பும் என்றும் ஆவலில் .

வியாழன், 20 மே, 2010

உயரும் சாலை மட்டம் தேங்கும் மழை நீர்

ச்ச தலைப்பே இத்தனை அழகா இருக்கே ..!!! எதோ சொல்லவரேன்னு நினைச்சிங்கன மேல படிங்க.

நாம எப்படி எல்லாம் அரசியல்வதிகளளையும் அரசு அதிகரிகளளையும் பாதிக்க படுகிறோம் என்பதை இந்த மழைய உதரணமா வச்சு பார்க்கலாம்.



18/05/2010 இரவில் கொஞ்சமா லைலா ( ஏன் எப்பபாத்தாலும் புயலுக்கு பொண்ணுங்க பேர் வைக்கரங்கன்னு தெரியமாடின்கிறது ஒருவேளை பேரு வைகரவரு பெண்ணல ஏதாவது பாதிக்க பட்டவங்கள இருப்பங்களோ ) தன்னோட வேலையை ஆரம்பிச்சுது . அது அப்படியே 19/05/2010 மாலை வரை கொஞ்சம் விட்டும் அப்பறமா கொஞ்ச நேரம் விடாமையும் கொட்டி தீர்த்திருச்சு. ( ஒருவேளை அந்த லைலா ஏதாவது ஆணால் பாதிக்கப்பட்டு அழுதுசோ ...!!! )



18/05/2010 இரவு என்னோட அறைக்கு என் அன்றைய தினத்தின் வேலையை எல்லாம் முடிச்சுட்டு போய்டேன் . மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே.விடிந்து அன்றாட அலுவல்களுக்கு செல்ல ஆயத்தமாகி என் இருசக்கர வாகனத்தை அதன் நிறுத்து பகுதியில் இருந்து எடுக்க வந்தால் ( அப்பவும் மழை பெய்துட்டுதாங்க இருந்தது நம்புங்க நான் கடமைன்னு வந்துட்ட புயலோ மழையோ வெயிலோ பார்ப்பதில்லை ) ஒரு அறை அடி தண்ணீர் என் இருசக்கர வாகனத்தை குளத்தினுள் நிறுத்தியதை போல் காட்சி அளித்தது . கடந்த 2006 ஆம் ஆண்டு பெரு மழையின் தாக்கத்தை பார்த்து எனது வீட்டு உரிமையாளர் கொஞ்சம் மேடாக்கி இருந்தார் . சரி இந்த அளவுக்கு நம்ம கட்டடத்துல தண்ணீர் நிற்கிரதுன எங்கையோ அடைப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன் . சாலையை தொட்ட போது புரிந்தது என் குடியிருப்பு மட்டும் அல்ல சென்னை முழுவதுமே இப்படி திடீர் குளத்தில் மிதக்கிறது என்பது.காரணம் என்னவாக இருக்கும் இந்த மழைக்கே இப்படி ஆகிவிட்டதே என்று யோசித்து எனது அலுவல் தொடர்பாக புதிய வாடிக்கையாளரை அவரது இல்லத்தில் சந்திக்க போய் இருந்தேன். வடிவேலு பாணியில் சொல்லவேண்டும் என்றால் நான் கொஞ்சம் ஷாக் ஆய்ட்டேன் அவங்க குடியிருப்பை பார்த்து . அதிகம் இல்லை சாலையை விட இரண்டடி ஆழத்தில் வீட்டை கட்டி வைத்திருக்கிறார் அவர் . என்னங்க இது இப்படி வீட்டை கட்டி வசுருக்கிங்கனு கேட்டா என்ன சார் பண்ணறது நான் கட்டலை எங்க அப்ப கட்டி வச்சாரு ஆனா ரோடு போடறவங்க நடைபாதையை மூடி ரோடு போடறாங்க நீங்களே பாருங்க முனைல நடைபாதை தெரியும் அப்படியே அதை பார்த்துட்டு வாங்க காணாம போயிருக்கும் இப்படி இருந்த எப்படி சார் என்ன சார் பண்ணறது நாங்களும் பழகிடோம்னு சாதரணம எடுத்துட்டு பேசினார் . எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு என்னடா இது நாளைக்கு வீட்டு உசரத்துக்கு ரோட போடுவாங்களோன்னு.இப்படி ரோடு மேல ரோடு போட்டுட்டே இருகன்களே ட்ரைனேஜ் சிஸ்டம் எல்லாம் சரியாய் இருக்கும்னு பாத்த அந்த வழியெல்லாம் அடைசுட்டங்க . அபாரம் எங்க இருந்தது மழை தண்ணி வெளிய போகும் ?..ஆனா நம்ம ஆளுங்க யாரு பாதாள சாக்கடை மூடிய திறந்து அதுக்கு போற மாறி ஒரு சின்ன வாய்க்காலை நாலா புறமும் வெட்டி வச்சுறாங்க அதுபோக அந்த மூடிய மூடாம போயிடறாங்க . அந்த வழிய போற இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்வேறு ( அப்படி ஒரு குழில விளுந்தேங்க நேத்தைக்கு [:(] . சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னனு எனக்கு தெரிஞ்ச பெறியாலரை கேட்டேன் இவர் பொதுப்பணி துறையில் வேலை செய்கிறார் . ரொம்ப சாதரணம சொல்லிட்டரு ஆனா எனக்கு தான் புரியலை ஏன் அப்படி பண்ணமாடிங்கரங்கனு .



அவரு என்ன சொன்னாரு அப்படின . போட்ட ரோடுல போடாம அந்த ரோட்டை பறிச்சு கீறி கிளறி அதே கல்லு அதுல கிடைக்கற கொஞ்சம் தார் ( இது திரும்ப உபயோகிக்கலாமம் ) எல்லாத்தையும் உபயோக படுத்தின சாலையை பழைய மட்டத்துலையே குறைந்த செலவில் போட முடியும் உதரணாமாக ஒரு கிலோ மீட்டார் சாலையை போடுவதற்கு ஒரு கோடி ருபாய் செலவானால் இப்படி செய்யும் போது அறுவது லட்சத்தில் முடித்து விடலாம் என்று .



அப்பறம் ஏங்க இப்படி போடறாங்க ஏற்க்கனவே பழுது பட்ட சாலையில் அதன் மீதே புதிதாக சாலையை போடுவதன் நோக்கம் என்ன ?..



அங்கங்கே ஒரு ஒரு வாரியத்தின் நிறுவனத்தின் குழி பறிப்பு ஏன் ஒருங்கிணைவு இல்லமால் ?



அப்படி குழிபறிக்கும் சாலைகளை ஒழுங்காக மூடாமல் ஏனோ தானோவென மூடி செல்வது ஏன் ?.



இப்படி சாலை மட்டம் உயரும் போது எல்லாம் மழை வெள்ளமாக மாறுவதை தடுக்க யோசிக்காமல் இருப்பது ஏன் ? வெள்ள நிவாரணம் கொடுக்க அலையும் அரசியல் மேதைகள் இதனை சரி செய்ய சிந்திக்காமல் இருப்பதன் காரணம் என்ன ?..



இதே சாலைகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் சகித்து கொள்வதன் பின்னணி என்ன ?..



நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு



லஞ்சம்



யாரோ ஒரு நூறு நபர்கள் சம்பாரிக்க பொதுமக்களை இப்படி சிக்கலில் சிக்க வைக்கலாமா ?

செவ்வாய், 18 மே, 2010

கருத்து சுதந்திரம் என்பது என்ன வார்த்தை ?..

எழுதி கிழித்த காகிதாமாய் கசக்கி எறிந்த குப்பையை போல் சுயபச்சாதபம் தேடும் மனிதர்கள் இடத்தில் மாட்டிகொண்ட மிருகம் போல் நான் . தடுக்கப்பட்ட பழம் ,தீர்ந்துவிட்ட பாத்திரம், வற்றிப்போன நீரோடை, பயனற்றவன் இன்று . சில நேரம் மதி மயங்கிடக்கிறேன் பழைய நினைவுகளில். பல நேரம் மதி கெட்டு கிடக்கிறேன் பைத்தியகார உலகின் நியமங்களை நினைத்து . இங்கே தீர்மானிக்கும் சக்தியாக காரணியாக காமமும் கடவுளும் இருக்கும் வரை யாரும் உண்மையை கடைசிவரை கண்டு உணரபோவது இல்லை .. உன்னையும் என்னையும் உள்ளுக்குளே கடக்க சொல்லுவது கடவுள் என்பது. புரிந்துகொள்ள பட்டதோ உனது கடவுளை விட எனது கடவுள் பெரியவர் அகவே உன் கடவுளில் இருந்து நீ கடந்து என் கடவுளிடம் வா எனும் சித்தாந்தம் . காமமோ இன்னும் பூசி மொழிகி அருவருப்படைய வைக்கிறது . முலைகளையும் யோனியையும் எத்தனை நாள் பத்திரபடுத்தி கொண்டே இருப்பது ?.. காவல்காரனாக இருப்பதற்கு கடவுளும் காமமும் பொக்கிசங்கள என்ன ?.. பரினமத்தின் அடுத்த கட்டத்தை தேடிசெல்ல அறிவுறுத்த யாருமில்லை பரினமத்தின் உந்துசக்தியை தடுப்பதற்கோ ஆயிரமாயிரம் சிந்தனைகள் சித்தாந்தங்கள் . பெரியார் கற்பு பெண்ணுக்கு அணிவிக்கப்பட்ட  விலங்கு என்று சொன்னார் .ஆனால் அவரின் வழிதோன்றல்கள் வாரிசுகள் என்று கூறிகொள்ளும் பலரோ முன்னறையில் ஒரு வேஷம் பின்னறையில் ஒரு வேஷம் என்று போட்டு கொண்டு தெரிகிறார்கள் . குஷ்புவிற்கு மட்டும் எதிர்ப்பேன எண்ணவேண்டாம் இங்கே அதிகாரமும் ஆற்றலும் மிதமிஞ்சி இருக்கும் அனைத்து மட்டங்களிலும் வேவேறன பிரச்சனைகளில் எதிர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கும் . தலையான பிரச்சனையை விடுத்து ஒன்றுக்கும் உதவாததை ஊதி பெருசாக்கி அதனை காசாக்கும் பொருளாராத மேதைகள் நமை சுற்றி சமுதாயம் எனும் போலி வலை ஒன்றினால் பிணைத்திருக்கிறார்கள் . அந்த வலையை தாண்டி யாரும் வெளியேற முடியாது . காரணம் அவர்களுக்கு எப்போதும் ஒரு ஆட்டு மந்தை தேவைபடுகிறது அவர்களை மட்டும் தற்க்காத்துகொள்ளுவதர்க்கு.நீங்கள் எல்லாம் அந்த ஆட்டு மந்தை கூட்டத்தில் ஒரு உறுப்பினர்கள் நான் அதனை விட்டு வெளியேறி தனித்து சுற்றித்திரியும் பலியாடு.

கருத்து சுதந்திரம் இதன் அர்த்தம் தான் என்ன என்னுடைய கருத்திற்கு மாற்றாக நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது தானோ ?..

நமது சமுதய சிந்தனையில் நிகழும் நிகழ்வுகளை உற்று நோக்குபோது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகிறது . ஆனால் உலக ஜனநாய வசிபிடத்துள் இந்திய நாட்டை போல் ஒரு கருத்து சுதந்திரத்தை உடைய சட்டரீதியாக பாதுகாப்பு கொடுக்கும் அரசியலப்பை எந்த ஒரு நிலப்பரப்பிலும் காணமுடியாது என்பது நிதர்சனம் .

ஆனால் இங்கே அதுவும் தமிழகத்தில் நடக்கும் கூத்துகளுக்கு அளவில்லாமல் போய்வருகிறது . பின் நவீனதுவம் , பகுத்தறிவு , மார்க்சியம் , கம்யுனிசம் இந்து அமைப்புகள் என்று விரவி கிடக்கும் அதிகார மையங்கள் ஆளுக்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள் .இது கருத்து சுதந்திரம் என்று.

சில நூற்றாண்டுகளுக்கு முன் காமத்தை தனி அதிகாரமாகவே எழுதிய வள்ளுவர் வேறு இன்று லீலா மணிமேகலை வேறு அகநானூறு புற நானூறு எழுதிய கவிகள் வேறு கலவி சுகம் தேடி மாதவியை நாடிய கோவலன் கதை வேறு , என்ன கொடுமை இது நான் வாழ்வது நாகரீகத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை மறுமதிப்பீடு செய்து தனக்குள்ளே வகுத்துக்கொண்டு அதனை மாற்றிகொண்டே வந்த சமுதாயா அமைபில இருக்கிறேன் ?..

 கருத்து வித்தியாசத்தை அதில் நாம் உணரப்படும் நுட்பத்தை கவனிக்க தவறி தனுக்கு எதிராக தன் நம்பிக்கைக்கு ஊருவிளைவிக்கிறதோ என்று சந்தேகம் கொண்டு . தனக்கோ தான் சார்ந்த மதத்திற்கு அமைபிர்க்கோ இனத்திற்கோ எதிர் கருத்துக்களை பயன்படுத்துபவர்களை சாடுவது கருத்து சுதந்திரம் என்று ஆகிப்போனது இன்று . இதற்க்கு காரணியாக என்னவெல்லாம் இருக்கிறது ?.. அந்த கூறு கெட்ட காரணிகள் மறுபரிசீலனை செய்யபடுவதற்கு ஏதேனும் வாய்புகள் உண்டா ?..

அல்லது யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் கேலிசெய்து அவமான படுத்தி கூறும் வசைசொற்கள் மட்டும் தான் கருத்து சுதந்திரம் என்று காலம் முழுவதும் பதிவு செய்யப்படுமா ?..

புதன், 12 மே, 2010

என்னை பற்றி

முதலில் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன் .

நான் ரொம்ப நல்லவன் ஆணா அதவிட ரொம்ப கெட்டவன் .உங்கள் அனைவரிடமும் இருந்து வேறுபட்டவன் முற்றிலும் மாறுபட்டவன் . உங்களை போல் அல்ல நான் . நான் வேறு நீங்கள் வேறு உங்களை போல் நான் இருக்கவேண்டும் என்றால் நான் எதற்கு அதுதான் நீங்கள் உள்ளிர்களே . நான் முரண்பாடுகளை முதுகில் சுமப்பவன் அல்ல ஆனால் முரண்களை மூட்டை மூட்டையாய் வைத்து கொண்டிருப்பவன் . நீங்கள் கொண்ட நம்பும் கருத்துக்களை சித்தாந்தகளை முறியடிக்கும் ஆற்றல் கொண்டவன் . நான் எதை பட்ற்றிகொண்டுள்ளேன் என்பதை அறிவிக்காதவன் .பதில்களை வைத்துக்கொண்டு கேள்வி கேட்ப்பவன் கேள்விகளை தயாரிப்பதற்காகவே பதில்களை சேகரிப்பவன் . தேடிக்கொண்டு இருப்பதற்க்காக தொலைந்து போனவன் . கெட்டவனை போல் நடிக்கும் நல்லவன் நல்லவனை போல் பாசாங்கு புரியும் கெட்டவன் .எதற்கும் அடிமையாகதவன் அடிமை படுத்தும் பொருள்களை அடக்கியாள்பவன் .ஆதிக்கம் செலுத்தும் அன்பானவன் . பணிவு மறுக்கும் மனிதன் .சமன்பாடுகளை கொண்டு சமத்துவம் வரும் என்பதை நம்பாதவன் சமத்துவம் ஒன்றுதான் சமுதாய முன்னேற்றம் என்பதை வெறுப்பவன் .முகத்தின் முன் பட்டவர்த்தனமாக எதையும் போட்டு உடைக்கும் வெளிப்படையானவன். உங்களை போல் எல்லாம் அந்தரங்கம் என்று செக்ஸ் பற்றியோ சாக்கடை என்று அரசியலையோ மத துவேசம் என்று அறியாமையை பற்றியோ பேச தயங்காதவன் . வாழ்கையை அதன் போக்கில் சென்று எனக்கு விருப்பமான வளைவு நெளிவுகளை உண்டாக்கிகொள்பவன். யாருக்கும் அஞ்சாதவன் அதற்க்காக போக்கிரியும் அல்ல பித்தனும் அல்ல . எச்சரிக்கை தேவை என்னிடம்.

என்னை நம்புகிற என்னில் நம்பிக்கை வைத்துள்ள என் தேவைகளைபற்றி
அக்கறைகொண்டுள்ள என்னை திருத்துவதற்காக என் தவறுகளை நேர்மையோடு எடுத்து சொல்கிறவரே என் உண்மையான நண்பர்.நான் என்ன செய்தாலும் ஏற்கிற,நான் எப்படி இருக்கிறோனோ அப்படியே என்னை ஏற்று என்மீது அன்பை பொழிகிற ஒருவர் எனக்கு நிச்சியம் நண்பராக இருக்க முடியாது
பயமுறுத்துகிறேன் என்று எண்ணவேண்டாம் நான் கொஞ்சம் எதையும் நேர முகத்தில் அடித்தார் போல சொல்லிவிடுவேன் .அது சரியோ தவறோ அதனை பற்றிய அக்கறை இல்லை . எனக்கு தோணுவதை செய்துகொண்டே இருக்கிறேன் என்று இதற்க்கு நிறுத்தம் வருமென தெரியாது எதிர்பார்த்து வாழ்வது இல்லை காரணம் இங்கே எதிர்பார்ப்பது கிடைப்பதில்லை கிடைப்பதை வைத்து தான் வாழ்க்கை அமைத்துகொள்ளபடுகிறது .சரி இனிமேல் என் புராணம் வேண்டாம் போதும் நிறுத்திக்கறேன்