பக்கங்கள்

வியாழன், 20 மே, 2010

உயரும் சாலை மட்டம் தேங்கும் மழை நீர்

ச்ச தலைப்பே இத்தனை அழகா இருக்கே ..!!! எதோ சொல்லவரேன்னு நினைச்சிங்கன மேல படிங்க.

நாம எப்படி எல்லாம் அரசியல்வதிகளளையும் அரசு அதிகரிகளளையும் பாதிக்க படுகிறோம் என்பதை இந்த மழைய உதரணமா வச்சு பார்க்கலாம்.



18/05/2010 இரவில் கொஞ்சமா லைலா ( ஏன் எப்பபாத்தாலும் புயலுக்கு பொண்ணுங்க பேர் வைக்கரங்கன்னு தெரியமாடின்கிறது ஒருவேளை பேரு வைகரவரு பெண்ணல ஏதாவது பாதிக்க பட்டவங்கள இருப்பங்களோ ) தன்னோட வேலையை ஆரம்பிச்சுது . அது அப்படியே 19/05/2010 மாலை வரை கொஞ்சம் விட்டும் அப்பறமா கொஞ்ச நேரம் விடாமையும் கொட்டி தீர்த்திருச்சு. ( ஒருவேளை அந்த லைலா ஏதாவது ஆணால் பாதிக்கப்பட்டு அழுதுசோ ...!!! )



18/05/2010 இரவு என்னோட அறைக்கு என் அன்றைய தினத்தின் வேலையை எல்லாம் முடிச்சுட்டு போய்டேன் . மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே.விடிந்து அன்றாட அலுவல்களுக்கு செல்ல ஆயத்தமாகி என் இருசக்கர வாகனத்தை அதன் நிறுத்து பகுதியில் இருந்து எடுக்க வந்தால் ( அப்பவும் மழை பெய்துட்டுதாங்க இருந்தது நம்புங்க நான் கடமைன்னு வந்துட்ட புயலோ மழையோ வெயிலோ பார்ப்பதில்லை ) ஒரு அறை அடி தண்ணீர் என் இருசக்கர வாகனத்தை குளத்தினுள் நிறுத்தியதை போல் காட்சி அளித்தது . கடந்த 2006 ஆம் ஆண்டு பெரு மழையின் தாக்கத்தை பார்த்து எனது வீட்டு உரிமையாளர் கொஞ்சம் மேடாக்கி இருந்தார் . சரி இந்த அளவுக்கு நம்ம கட்டடத்துல தண்ணீர் நிற்கிரதுன எங்கையோ அடைப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன் . சாலையை தொட்ட போது புரிந்தது என் குடியிருப்பு மட்டும் அல்ல சென்னை முழுவதுமே இப்படி திடீர் குளத்தில் மிதக்கிறது என்பது.காரணம் என்னவாக இருக்கும் இந்த மழைக்கே இப்படி ஆகிவிட்டதே என்று யோசித்து எனது அலுவல் தொடர்பாக புதிய வாடிக்கையாளரை அவரது இல்லத்தில் சந்திக்க போய் இருந்தேன். வடிவேலு பாணியில் சொல்லவேண்டும் என்றால் நான் கொஞ்சம் ஷாக் ஆய்ட்டேன் அவங்க குடியிருப்பை பார்த்து . அதிகம் இல்லை சாலையை விட இரண்டடி ஆழத்தில் வீட்டை கட்டி வைத்திருக்கிறார் அவர் . என்னங்க இது இப்படி வீட்டை கட்டி வசுருக்கிங்கனு கேட்டா என்ன சார் பண்ணறது நான் கட்டலை எங்க அப்ப கட்டி வச்சாரு ஆனா ரோடு போடறவங்க நடைபாதையை மூடி ரோடு போடறாங்க நீங்களே பாருங்க முனைல நடைபாதை தெரியும் அப்படியே அதை பார்த்துட்டு வாங்க காணாம போயிருக்கும் இப்படி இருந்த எப்படி சார் என்ன சார் பண்ணறது நாங்களும் பழகிடோம்னு சாதரணம எடுத்துட்டு பேசினார் . எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு என்னடா இது நாளைக்கு வீட்டு உசரத்துக்கு ரோட போடுவாங்களோன்னு.இப்படி ரோடு மேல ரோடு போட்டுட்டே இருகன்களே ட்ரைனேஜ் சிஸ்டம் எல்லாம் சரியாய் இருக்கும்னு பாத்த அந்த வழியெல்லாம் அடைசுட்டங்க . அபாரம் எங்க இருந்தது மழை தண்ணி வெளிய போகும் ?..ஆனா நம்ம ஆளுங்க யாரு பாதாள சாக்கடை மூடிய திறந்து அதுக்கு போற மாறி ஒரு சின்ன வாய்க்காலை நாலா புறமும் வெட்டி வச்சுறாங்க அதுபோக அந்த மூடிய மூடாம போயிடறாங்க . அந்த வழிய போற இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்வேறு ( அப்படி ஒரு குழில விளுந்தேங்க நேத்தைக்கு [:(] . சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னனு எனக்கு தெரிஞ்ச பெறியாலரை கேட்டேன் இவர் பொதுப்பணி துறையில் வேலை செய்கிறார் . ரொம்ப சாதரணம சொல்லிட்டரு ஆனா எனக்கு தான் புரியலை ஏன் அப்படி பண்ணமாடிங்கரங்கனு .



அவரு என்ன சொன்னாரு அப்படின . போட்ட ரோடுல போடாம அந்த ரோட்டை பறிச்சு கீறி கிளறி அதே கல்லு அதுல கிடைக்கற கொஞ்சம் தார் ( இது திரும்ப உபயோகிக்கலாமம் ) எல்லாத்தையும் உபயோக படுத்தின சாலையை பழைய மட்டத்துலையே குறைந்த செலவில் போட முடியும் உதரணாமாக ஒரு கிலோ மீட்டார் சாலையை போடுவதற்கு ஒரு கோடி ருபாய் செலவானால் இப்படி செய்யும் போது அறுவது லட்சத்தில் முடித்து விடலாம் என்று .



அப்பறம் ஏங்க இப்படி போடறாங்க ஏற்க்கனவே பழுது பட்ட சாலையில் அதன் மீதே புதிதாக சாலையை போடுவதன் நோக்கம் என்ன ?..



அங்கங்கே ஒரு ஒரு வாரியத்தின் நிறுவனத்தின் குழி பறிப்பு ஏன் ஒருங்கிணைவு இல்லமால் ?



அப்படி குழிபறிக்கும் சாலைகளை ஒழுங்காக மூடாமல் ஏனோ தானோவென மூடி செல்வது ஏன் ?.



இப்படி சாலை மட்டம் உயரும் போது எல்லாம் மழை வெள்ளமாக மாறுவதை தடுக்க யோசிக்காமல் இருப்பது ஏன் ? வெள்ள நிவாரணம் கொடுக்க அலையும் அரசியல் மேதைகள் இதனை சரி செய்ய சிந்திக்காமல் இருப்பதன் காரணம் என்ன ?..



இதே சாலைகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் சகித்து கொள்வதன் பின்னணி என்ன ?..



நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு



லஞ்சம்



யாரோ ஒரு நூறு நபர்கள் சம்பாரிக்க பொதுமக்களை இப்படி சிக்கலில் சிக்க வைக்கலாமா ?

2 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

அருமையான பதிவு.

ஏன் எப்பபாத்தாலும் புயலுக்கு பொண்ணுங்க பேர் வைக்கரங்கன்னு தெரியமாடின்கிறது ஒருவேளை பேரு வைகரவரு பெண்ணல ஏதாவது பாதிக்க பட்டவங்கள இருப்பங்களோ: சூப்பர்...

insight சொன்னது…

நன்றிங்க sundar மீண்டும் வருக