பக்கங்கள்

திங்கள், 24 மே, 2010

போக்குவரத்து ....

சொல்லறதுக்கு சுலமாப இருக்குங்க இந்த வார்த்தை . அனால் இன்று இந்த வார்த்தை உபயோகிப்பதை போல் அத்தனை சுலபமாக இருப்பதில்லை நமது அன்றாட போக்குவரத்து . முன்மெல்லாம் பயண நேரம் மிக அதிகமா இருந்தாம் தாத்தா பாட்டி எல்லாம் கதை சொல்லுவாங்க . வண்டி பூட்டி போகணுமாம் அதும் எப்படி காலைல ஒரு விசேசத்துக்கு கிளம்பனும்ன நள்ளிரவே பயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமாம் . எத்தனை தூரம்னு நினைச்சிங்க ஒரு இர்வத்தி அஞ்சு கிலோ மீட்டர் . அப்பா எல்லாம் அத்தனை கஷ்டமா இருந்து போக்குவரத்து . இவங்களுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க எல்லாம் நடை போட்டு போயிருப்பாங்க நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னைக்கு நாம இருக்கற போக்குவரத்து சூழலை பார்க்கும் போது.

சிநேகிதி ஒருத்தி லண்டன்ல இருக்க டேய் நான் ஏர்போர்ட் ல இருக்கேன் நாளைக்கு நைட் வந்து சேன்தீருவேன் என்ன பிக் அப் பண்ணிக்க அப்படின்னு சொல்லுவா . இனொரு நண்பன் இருக்கான் அவன நான் " பிளைட் மிஸ் பண்ணி " ன்னு சொல்லுவேன் . காரணம் டொமஸ்டிக் பிளைட் தானடா ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி இருந்த போதும்னு சொல்லியே மிஸ் பண்ணிருவான் . நான் மட்டும் என்னவாம் . 3.45 இகு கோவை ஈரோடுல இருந்து கிளம்பும் நான் 2.30 இகு வீட்டுல இருந்து கிளம்புவேன் .24 கிலோமீட்டர் தான 30 min ல போய்கிடலாம்ன்னு நினைச்சு கிளம்புவேன் ஆனா பாருங்க நான் லேட்டா ஐடுவேன் எப்பவும் முப்பது நிமிஷம் லேட்டா வர கோவை எக்ஸ்பரஸ் அன்னைக்குனு பாத்து சரியான நேரத்துக்கு வந்து சரியான நேரத்துல கிளம்பி போயிருக்கும் . எல்லாம் தலைஎலுத்துனு அடுத்த ரெய்ல புடிக்க உக்காந்துக்குவேன் சிவனேன்னு . சரி இது கூட என்னைக்காவது நமக்கு நடக்கராதுன்னு நினைச்சா தினம் தினம் நடக்குதே ஒரு ட்ராபிக் ஜாம் . அட போடா பேசாம நாம செத்து போய்டலாம்னு தோணும் . அதும் இந்த வெய்யல் காலத்துல போக்குவரத்து நெரிசலில் மாட்டிகிட்ட அவளவுதான் பொரிக்கவோ வறுக்கவோ தேவையே இல்லைங்க . அப்படியே சாப்பிடலாம் மனித கறியை . அந்த அளவுக்கு சூரியன் சுட்டு எரிக்கறது இல்லைங்க !!! நாம எல்லாரும் சேந்து உபயோகிக்கற வாகனத்தின் வெப்பமும் சூரியனோட சேந்து கொடுமையான வெப்பத்தை உண்டாக்கி நமை வேக வைக்குது ( ஹ்ம்ம் எப்படியும் அடுத்த வருசத்துக்குள ஏசி கார் ஒன்னு வாங்கினாதான் சமாளிக்க முடியும் போல ).

இத்தனைக்கும் நாம இன்னைக்கு இருக்கற கால கட்டம் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறோம் . அனால் இப்போதெல்லாம் அப்படி பயணபட முடிகிறாத என்ன ?.. என்னைக்காவது சுற்றுலா போறதமட்டும் சொல்லலைங்க தினசரி போக்குவரத்தை தான் சொல்லுகிறேன் . அதுவும் தருமமிகு சென்னையில் பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் போது தான் தெரிகிறது எந்த காலத்டத்தில் வாழ்கிறோம் என்று பத்து கிலோமீட்டர் தொலைவு செல்ல இன்று ஒரு மணிநேரம் ஆகிறது . அத்தனை போக்குவரத்து நெருக்கடி யாரை குறை சொல்லலாம் ?...

ஐய்யா நான் குறை சொல்லரதுக்குனே சில பல ஜீவன்கள் இருக்குதே . அது எல்லாம் யார் யார் ன்னு பாக்கலாமா ?..

1 ) . நீல்மெட்டல் பனால்கா ( இவங்க குப்பை அல்லராங்கள இல்ல குப்பை போடராங்கலானு யாரவது சொல்லுங்க பாக்கலாம் ..

2 ) . மாநகர போக்குவரத்து கழகம் ( ஹ்ம்ம் இவங்கள என்ன சொல்றது போங்க )

3 ) . சென்னை போக்குவரத்து காவல் துறை ( இவங்களுக்கு என்னைக்கு தான் சரியான புத்தி வருமோ .)

4 ) . நாம துணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் . ( பாலம் கட்ட்டிடே இருக்காருங்க )

5 ) . சென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ ( வேற வழி இல்லை இவங்க பண்ணறத பாக்கறப்ப )

6 ) நடைபாதை வியாபாரிகள் ( இது என்ன சொற்றொடர் ?.!!! சரியான பதம் தான யாரவது தமிழ் ஆர்வலர் சொல்லுங்களேன் )

7 ) . விதிமுறை மீறிய கட்டிடங்கள் ( கொஞ்சத்த காச சும்மா விடமுடியுமா இடிக்கறதுக்கு சொல்லுங்க பாவமில்லையா அவிங்க )

8) விதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் ( உதாரணம் அசோக் நகர் சரவணாபவன் )

9 ) நிறுவனங்கள் வாரியங்கள் :- ( யாருக்காக தோண்டறாங்க நமக்கதன .. நாம வீட்டுல கரண்டு வேணும் தொலைபேசி வேண்டும் கண்ணீர் விடவும் மாண்ட மயிலாட மார்பாட நிகழ்ச்சியை பார்க்க கேபிள் வேண்டும் அந்த நல்ல எண்ணத்துல தான தோண்டறாங்க )

10 ). நீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் ( ஆமாங்க நாம்தான் மிக பெரிய கரணம் இத்தனை பெரிய போக்குவரத்து நெரிசலுக்கு )
 
சரி இவங்களோட குறைகள் என்ன என்ன ஒன்னு ஒன்ன சொல்லறேன் கேளுங்க .

நீல் மெட்டல் பனால்கா : இவங்க ரொம்ப சரியா பீக் அவர் ன்னு சொல்லற நேரத்துலதான் குப்பை அல்லுவாங்க அதை எல்லா பக்கமும் கொட்டிட்டே போவாங்க

மாநகர போக்குவரத்து கழகம் : பாதி நெருக்கடி இவங்க தராது தான் சரியான வேகத்துலியே சரியான நிறுத்ததிலையோ சரியான வழிதடத்திலையோ இவர்களின் ஓட்டுனர்கள் பேருந்தை செலுத்துவதே கிடையாது

சென்னை போக்குவரத்து காவல் துறை : இவங்களுக்கு என்னைக்கு தான் புத்தி வருமோ தெரியலை இன்னைக்கு எத்தனையோ தொழில் நுட்ட்பம் வந்தாச்சு இவங்க பண்ணற அக்கபோரு சரிபன்னறேனு சொல்லி ஐயோ கடவுளே பேசாம என்ன யாரவது ஆள் வச்சு அடிச்சு கொன்னுரு.

துணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் :- ஐய்யா நீங்க பாலம் எல்லாம் கட்டறீங்க அதுக்கு ஒரு பெரிய கும்பிடு ஆனா அந்த பாலம் எல்லாம் இன்னும் எத்தனை வருசத்துக்கு நெருக்கடிகளை சமாளிக்கும் அதும் இப்ப செனடாப் ரோடு ல கட்டி இருகின்களே அந்த பாலத்துல உங்கள என் பைக் பின்னாடி உக்காரவச்சு ஓட்டிட்டு போகணும் ஆசையா இருக்கு ஆனா துனைமுதல்வரை கொன்ற தற்கொலை கொலையாளினு தினத்தந்தில பேரு வந்து என் குடும்ப மானம் போயிருமேன்னு பயமா இருக்குங்க .

சென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ :- ஆடோகார அன்பர்களே நீங்க சர் பூர் ன்னு போறதால முண்டி வழி விட்டு போகததினால் எதனை நெருக்கடி தெரியுங்கள.கொஞ்சம் அனுசரிங்க அண்ணாச்சி நீங்க இல்லேன்னா நிறையபேருக்கு போக்குவரத்தே இல்லைதாங்க ஆனா அதே மாறி உங்களால நிறைய பேரு பதிக்க படரோமுங்க .

நடைபாதை வியாபாரிகள் :- ஏங்க நீங்க எல்லாம் " நடைபாதைல " கடை போட்டு உக்கதுக்கரிங்க உங்க பொழப்பை பாக்கறதுக்கு நடந்து போறவங்க ரோடுல போறாங்க அவங்க பொழப்ப பாக்கறதுக்கு ரோடுல போகவேண்டியவங்க அவங்க பொழப்பை பாக்கமுடியறது இல்லைங்க காரணம் நடை பாதையில் நடக்கவேண்டியவர்கள் ரோட்டில் நடப்பதால்.

விதிமுறை மீறிய கட்டிடங்கள் :- உங்களுக்கு ரெண்டு அடி அதிகமா கிடைக்குதுன்னு எடுதுக்கரிங்க ரோடு விரிவாக்கம் பண்ணனுமேன்னு நினைச்சு வந்த அப்படி இடமே இல்லையே இங்கனு நினைகரமாரி சுத்தி வளைச்சு போது இடத்தை அபகரிச்ச எப்படிங்க .

விதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் :- இத ஏற்று கொள்ளவே முடியாது காவல்துறை ஆணையர் இதற்க்கு என்ன பதில் சொல்லுவார் ?.. இல்லைன்னு சொல்லமுடியாது . நான் ஒரு வராம சில குறிப்பிட்ட கடைகள் நிறுவனங்கள் அருகில் இருந்து காட்சி படம் எடுத்து வைத்து இருக்கிறேன் ஆதாரமாக . ரொம்ப சின்ன உதாரணம் . அசோக் நகர் பார்க் அருகில் நிறுத்த முடியாது ஆனால் அதனை விடுத்தது ஐம்பது அடி தாண்டினால் நோ பார்கிங் பலகையை காணலாம் சரவணா பவன் அருகில் அங்கு வரும் வாகனகள் பின்னல் வருவதும் முன்னால் போவதும் என்றும் பில்லர் அருகில் தரும் நெருக்கடி சாதாரண போக்க்வரத்தில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு சவுக்கடி.

நிறுவனங்கள் வாரியங்கள் :- ஐய நீங்க தோண்டுங்க நள்ளிரவில் வாங்க அது என்ன நெருக்கடி நேரத்தில் வந்து வேலை செய்யறிங்க நீங்க மக்களுக்கு சேவை தான செய்யறீங்க ?.. அப்பறம் குழி தோண்டி அதனை மூடியும் மூடாமலும் செல்வது அந்த குழியில் விடாமல் இருக்க வாகனத்தனை வளைத்து நெளிச்சு ஓட்டும்போது ஏற்ப்படும் விபத்து என்னக சொல்லறது இத.

நீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் :- ஆமாங்க நாம எல்லாருமே இதற்க்கு பொறுப்பாளிகள் தான் .போது போக்குவரத்தை அதிகரிக்க செய்தல் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தால் நெருக்கடி குறையும் நெருக்கடி குறைந்தால் நேரம் மிச்சமாகும் நேரம் மிச்சமானால் சொகுசு அதிகரிக்கும் .
 
நமது இந்திய பொருளாதாரம் மாமேதைகள் பொருளாதார சூறாவளிகள் புலிகள் சொல்லுவது போல் எல்லாம் இல்லைங்க உண்மையில் நமது இந்திய பொருளாதாரம் ஆயில் பொருளாதாரம் தான் . ஆயில் ( பெட்ரோல், டிசல் ,மண்ணெண்ணெய் , காஸ் ) பொருள்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வரிகள் தான் உண்மையில் நமது அரசாங்கத்தை இயங்க வைக்கிறது . நாம் பொது போக்குவரத்தை அதிகபடுதினாலே நமது அந்நிய செலாவணியும் மிச்சமாகும் அரசாங்கத்தின் சுமையும் மிச்சமாகும் .

ஒரு நபர் மட்டும் செல்லும் கார் அடுத்த தெருவுக்கோ அல்லது அருகாமை கடைகளுக்கோ இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் இருக்கலாம். இதனால் சுற்றுப்புறமும் மேன்மையடையும் நமது காசும் மிச்சமாகும் போக்குவரத்து நெரிசலும் குறையும் அரசாங்கத்தின் அந்நிய செலாவணியும் மிச்சமாகும் .

இதனை நேரம் இதனை படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க . எதாவது பலன் வந்தால் நிச்சியம் சந்தோஷ படுவேன் . நமது அடுத்த சந்ததிக்கு எதாவது விட்டு போகனுங்க எரிச்சலையும் ஆற்றாமையும் கோபத்தையும் அல்ல . நிச்சியம் இந்த போக்கு வரத்து நெரிசல் நம்மால் அவர்கள் மூளைக்குள் உளவியல் ரீதியாக பாதிக்க செய்யும் . யோசித்து பாருங்கள் அன்பர்களே

1 கருத்து:

சுட்டபழம் சொன்னது…

மாம்ஸ் :( இங்கயும் நிறய எழுத்துப்பிழைகள் :((