பக்கங்கள்

திங்கள், 21 ஜூன், 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடா உலக தமிழ் இறுதி மாநாடா




அடேங்கப்பா எங்க பாத்தாலும் உலக தமிழ் மாநாடு பத்தி தான் பேசறாங்க ( செம் மொழி ) நல்லவிசியம்தாங்க நிறைய ஆய்வு கட்டுரைகள் விவாதங்கள் அடுத்த கட்டவளர்ச்சி கோவை மாநகரத்துல நிறைய மரம் போச்சு அடிப்படை தேவைகள் மாநாட்டை ஒட்டி வேகமாகவும் விவேகமாகமும் செய்து தந்திருக்காங்க நிறையபேரு வசூலில் கொழித்து இருக்காங்கனு பேச்சு வருது திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கலைஞர் அவர்களுக்கும் ஒரு பேரு கிடைக்குது துணை முதல்வர் ஸ்டாலின் நல்லாவே எல்லா பணிகளையும் முடிக்கி விட்டு திறம்பட மாநாட்டை நடத்த திட்டம் போட்டு அதன் வழியில் அருமையாகவும் செயல்படறார். நிறைய தமிழ் அறிஞர்கள் அவர்கள் அறிவின் நீள அகலங்களை நமக்கு கொடுக்க இருக்கிறார்கள் அதற்க்கு என் பணிவான வணக்கம்

மத்த மொழிகளில் நம்ம தமிழ் மாறி இருக்கணு எனக்கு தெரியலைங்க நான் அத்தனை பெரிய ஆளு எல்லாம் கிடையாது ஆனா தெரிஞ்சத வச்சு சொல்லறேனுங்க. தமிழ் ஆதி மொழியாக இருந்தாலும் அதனை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து ஆராய முடியும் முத்தமிழ்ன்னு சொல்லராங்க அதனை
இயல் இசை நாடகம் என்று . மூன்றும் ஒரே கற்பிதமான மொழி என்பதில் வந்தாலும் மூன்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு .

இயல் என்பது நாம் சாதரணமாக பொதுவழக்கில் கொண்டு இருப்பது இதற்க்கு எழுத்து வரலாறு பன்மை தன்மை என்று நிறைய இருக்கு இப்ப நடக்க போற மாநாடு கூட இயல் தமிழை முன்னிறுத்தி தான் நடக்க இருக்கிறது . அனால் இசை, நாடகம் எனும் இரண்டு தமிழும் எதோ போன ஜென்மத்தின் பாவங்களை போல நடத்த படுவது வேதனை அளிக்கிறது .ஒரு வேலை இசை என்பது பார்ப்பனர்கள் சார்ந்தது என்று போலி தமிழ் திராவிடர்கள் நினைத்து கொண்டார்களோ என்னவோ நாடக தமிழை ஏன் இப்படி ஒதிக்கி இருக்கிறார்கள் என்பது முற்றிலும் புரியாத விசியாகமாக இருக்கிறது .

இசை தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ நாடக தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ இல்லை இந்த மாநாட்டில் என்ன செய்தது இந்த இரட்டை தமிழ் இவர்களுக்கு ?.. இயல் தமிழ் பொது புத்தியில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது எப்படியும் வளர்ந்து கொண்டு இருக்கிறது அனால் இசையும் நாடகமும் அல்லவே சவளை பிள்ளைகளை போல இருக்கிறது இன்றைய நிலையில் .

இயல் தமிழ் பற்றி ஆயிரம் கட்டுரைகள் வந்தால் இசைக்கும் நாடகத்திற்கும் ஒரு நூறு கட்டுரைகள் கூடவா வரவில்லை ?.. அப்படியானால் இதுவரை ஆண்டுவந்த திராவிடம் பேசும் பெரியாரின் வாரிசுகள் தமிழ் கொடை ஆற்றியது இவளவுதான ?.. இனிவரும் ஆண்டுகளிலாவது இசை தமிழையும் நாடகத்தமிழையும் வளர்க்க ஏதேனும் வழிகள் கொண்டுவர போகிறார்களா ?..

இவர்களா செய்யபோகிறார்கள் பள்ளி கல்வியில் 6000 ஆசிரியர்கள் பற்றகுறையாம் அட தமிழ் ஆசிரியர்கள் இல்லையாமங்க இவங்க இதையே கவனிக்க முடியலை தமிழ எங்க வளர்க போறாங்க விளம்பரத்துல அவங்கள வளதுக்கவே நேரம் பத்தலை .

இன்னொரு பக்கம் உண்மை தமிழன் நாம் தமிழன் உலக தமிழ்னு சொல்லறவங்க எல்லாம் புலிக்கு வால பிடிக்கறதுக்கு தான் முயற்சி செய்யறாங்க ராஜபக்சே எத்தன சதவீதம் இலங்கை தமிழர்கள் சாக காரணமோ அதே அளவிற்கு புலி தலைவன் பிரபாகரனும் காரணம் என்பதை மறைக்கும் முயற்சி செய்யவே அவர்களுக்கும் நேரம் போதவில்லை இருக்கும் நேரமும் புலிகளை ஆதரிக்கதவர்களை தமிழ் இன துரோகி முத்திரை குத்த நேரம் போதவில்லை அவர்களுக்கு . விடு தமிழா தமிழ் இனி மெல்ல சாகும் என்பது எல்லாம் பழங்கதை தமிழை கொண்டுபோய் சுடுகாட்டில் வயதாகி விட்டது வந்து வாய்க்கரிசி போடவேண்டியது தான் மிச்சம் அதையும் இவர்களே போட்டு முடித்து விடுவார்கள் .

1 கருத்து:

Vijays சொன்னது…

இது உங்கள் முதல் பதிவா இல்லை கடைசி பதிவா