பக்கங்கள்

செவ்வாய், 29 ஜூன், 2010

காதல்



என்ன மந்திர சொல் இது ..... உலக ஜீவராசிகள் அனைத்தும் ஈடுபடும் ஒரே செயல் இதுதான் . மனித குலத்தில் அதிகம் வறுபடும் சொல்லும் இந்த காதல் தான்.

இது ஒரு இயற்க்கை தேவை அவளவுதனே இதில் இருக்கிறது இதற்க்கு ஏன் இப்படி எதிர்ப்பு ?. அடிகடி கேள்விபடுவதுதான் ஆனால் இந்த முறை என்னை ஏதோ செய்துவிட்டது .இரு வேறு சாதி உயிர்கள் காதல் கொண்டால் அவ்வப்போது வாய்க்காலில் பிணம் போகும் எங்கள் பகுதியில் இல்லை என்றால் அதுவரை மருத்துவ மனை பக்கமே போகாமல் இருந்த பெண்ணுக்கு பல ஆண்டுகள் தீராத வாயிற்று வலி இருபதாகவும் அதனால் தூக்கு போட்டுகொண்டதாகவும் கதை பரப்படும் அந்த பெண்ணின் பெற்றோரே தூக்கி கட்டி இருந்தாலும் இப்படிதான் சம்பவம் பதிவு செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு காரணம் தெரிந்திருந்தாலும் காலப்போக்கில் அட அவ பொண்ண வயித்துவளில தூக்குபோட்டுகிச்சுன்னு மிக சாதரணமாக எடுதுகொள்கிரார்கள் அந்த பெண் அவர்கள் சாதியாக இருந்துவிட்டால் . இது ஒரு மாறி அப்படின இன்னொன்னு இருக்கு அவளா அவ அவனோட ஓடி போய்ட்டா பாரேன் ரெண்டு பசங்களை விட்டுட்டு எப்படித்தான் போனாலோ அவனுக்கு வேற ஆள இல்ல இவள இழுத்துட்டு போயிருக்கான் பாரு புத்திகெட்டவன் அப்படின்னு பேசிக்கறாங்க .இஹுவாது அவங்க ஒதின்கிபோனது பரவால . கணவன் உடன் சேர்ந்து இருந்தாலும் அவளுக்கு தொடுப்பு இருக்கு அதன் இப்படி மினிக்கரானு சொல்லறது .

எனக்கு அதிகம் புரிவதே இல்லை வயித்துவலியல் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் காதலன் ஏன் விரைவில் அந்த இறந்துபோன காதலியை மறந்துபோகிறான் அவனும் மறித்து போகாமல் மனம் செய்துகொள்கிறான் . ( இது ஆண் மட்டும் பண்ணிக்கறது இல்ல ஆண் செத்துபோய் பெண் அந்த காதலனை மறந்து போகும் சம்பவங்களும் இருக்கிறது )

தனது பெண்ணின் வாழ்க்கை சந்தோசத்தை விட சாதி அத்தனை முக்கியமாக நினைப்பதன் காரணம் என்ன ?..

ஏற்க்கனவே திருமணமான பெண் புது இளைஞன் அல்லது வேறொருத்தியின் கணவனுடன் அவர்களை விட்டு போய் வாழும் போது அவளை மட்டும் அவளா அவ ஓடிப்போனவனு சொல்லுவது ஏன் ( ஆணாதிக்கம்னு சொல்லமுடியாது பெரும்பாலான ஆண்கள் இதனை பற்றி பேசுவது இல்லை பெண்கள் மட்டுமே அவளை புறம் பேசுகிறார்கள் )

ஒருவனுடன் அல்லது ஒருத்தியுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது வேறு ஒரு காதல் வந்தால் அந்த காதலை ஏற்றுக்கொண்டு அதனுடனும் வாழ்வது அதனை தவறா ?.. ( என்ன புத்தி இது அப்படின்னு கேக்காதிங்க )

படிக்கறவங்க எல்லாம் மறக்காம கொஞ்சம் பின்னுட்டம் போடுங்கள் இதனை ஒட்டி இனி நிறைய பதிவுகள் இடவேண்டியதாக இருக்கிறது உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப என்னுடைய விளக்கங்களை கொடுக்க முயலுவேன்.

அட இந்த பதிவு ஆரம்பிச்சதுக்கான காரணம் நேத்து எங்க பக்கத்துக்கு ஊருல ஒரு பொண்ணு வயித்து வலில தூக்கு போட்டுகிசுங்க ( ஒரு வேலை உண்மையாலும் வயிதுவலிய இருக்கும் எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும் அதன் பாதிப்புதான் இந்த பதிவு பாவம் நல்ல படிக்கும் சிலவருடங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணும் கூட கல்லுரிபடிப்பின் பாதியிலே இப்படி அந்த பொண்ணுக்கு வயித்துவலி வந்திருக்க கூடாது . கொஞ்சம் படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்திருந்து வந்திருந்தா வைத்தியம் பாதிருக்கலாமுங்க . சோகமாஇருக்கு )

கருத்துகள் இல்லை: